வியாழன், 18 ஏப்ரல், 2013

மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை

இருளின் அழிவில்தான் ஒளி பிறக்கின்றது

அறியாமையின் அழிவில்தான் ஞானம் பிறக்கிறது


மாற்றங்கள் வாழ்வில் தவிர்க்க இயலாதவை. ஒவ்வோர் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வாழ்க்கை என்ற இயக்கமே மாற்றத்தின் அடிப்படையில்தான் நடந்து வருகின்றது. ஆனால் பொதுவான மனப்போக்கு மாற்றத்திற்கு எதிராக இருக்கிறது. சிலர் மாற விரும்புவதில்லை; சிலர் மாற்றங்களை எதிர்க்கிறார்கள்; சிலர் மாறத் தெரியாமல் தவிக்கிறார்கள்; ஒரு நிலையிலிருந்து மேல் நிலைக்குப் பதவி உயர்வு பெறும்பொழுது அந்த உயர் தகுதிக்கு ஏற்றாற்போல் உங்களை மாற்றிக் கொள்ளவேண்டியது அவசியம்.

ஒன்றின் அழிவில்தான் மற்றோன்று வளரமுடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைப் பருவம் அழிந்தால்தான் வாலிபப் பருவம் பெற முடியும். வாலிபம் அழிந்தால்தான் முதுமை பெற முடியும். பிரமசர்யம் அழிந்தால்தான் குடும்பஸ்தனாக முடியும். இருளின் அழிவில்தான் ஒளி பிறக்கிறது. அறியாமையின் அழிவில்தான் ஞானம் பிறக்கிறது. இதனை நன்கு உணர்ந்து மாற்றத்தை வரவேற்கவும் அதற்குத் தக்கபடி மாறவும் தயாராவோம்.


கர்னல். பா. கணேசன், B.Tech. V.S.M. ( ஓய்வு )..  

1 கருத்து:

  1. இது போன்ற சிறு சிறு பதிவுகள் வழியாக நீங்கள் சொல்லும் செய்திகள் யாவரும் அறிய, பயனுறத் தக்கவையாக உள்ளன.

    தொடருங்கள் ஐயா.

    நன்றி.

    பதிலளிநீக்கு