புதன், 11 டிசம்பர், 2019

                               உத் திரவிடுவதா ! 
                                    வேண்டுகோள் விடுப்பதா ?

                 1989 March 26  கர்னல் கணேசன் ஒன்றரை ஆண்டுகால உறைபனி வாழ்க்கைக்கு பிறகு தாயகம் திரும்பினார்.உடனடியாக அவருக்கு பணியிடமாற்றம் தராமல் பதினைந்து நாட்கள் விடுமுறையும் பின்னர் இராணுவத் தலைமையகம் வரவும் உத்திர விடப்பட்டிருந்தது.
               
                 சிறிதுகால இழுபறி நிலைக்குப்பின் அவர் பெங்களூரு பயிற்சி மையத்தில் பயிற்சி  படைப்பிரிவு தலைவராக இட மாற்றம் பெற்றார்.01 Sep 1989 கணேசன் மெட்றாஸ் என்ஜினீயர் குரூப் என்ற பயிற்சி தளத்தில் படைப்பிரிவு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.



                     அதிகாரிகளுக்கான வண்டிகள் தனியாக பராமரிக்கப்பட்டு தேவைக்கேற்ப அனுப்பப்பட்டன.வண்டிகள் மாறினாலும் டிரைவர்கள் மாறுவதில்லை.ஆனால் கணேசனுக்கு மட்டும் தினம் ஒரு வண்டியாகவும் வேறு வேறு டிரைவர்களாகவும் வந்துகொண்டிருந்தார்கள்.இது சில நிர்வாகப் பிரச்சினையை ஏற்படுத்தியது.நாளைக்கு இத்தனை மணிக்கு வரவேண்டும் என்று சொல்லியனுப்பினால் மறுநாள் வேறு டிரைவர் தாமதமாக வந்து தனக்குத் தெரியாது என்பார்.




             கணேசன் வண்டிகளை நிர்வகிக்கும் அதிகாரியை சந்தித்து ஏன் நிரந்தரமான டிரைவரை அனுப்பவில்லை என்று காரணம் கேட்டார். அதற்கு அவர் கர்னல் கணேசனிடம் பணியாற்ற டிரைவர்கள் பயப்படுவதாகவும் இன்னும் சில நாட்களுக்குள் ஒரு டிரைவரை ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார்.
            இராணுவ தளத்தில்  கட்டளை இடப்படுகின்றனவா அல்லது வேண்டுகோள் விடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் கணேசனுக்கு ஏற்பட்டது.
                சுயநலமற்ற தனது எண்ணத்தின் நேர்மையிலும் தனிமனிதனாகத் தனது செயாக்கத் திறமையிலும் சிறப்பான ஒரு அதிகாரி தனது சொல்லிலும் செயலிலும் ஒரு கண்டிப்பு தன்மையைக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பவர் கணேசன்.தனது தலைமையின் கீழ் பணியாற்றுபவர்களை அப்படித்தான் அவர் உருவாக்குவார்.


               இராணுவப் பணிகளில் வேண்டுகோள் விடுப்பதற்கு எப்பொழுது அவசியமாகிறது.சட்டத்திற்குப் புறம்பாக ,நேர்மையற்ற வழிகளில் செல்லும்போது,தன்னால் முடியாது என்ற நிலை வரும்போது  தனது பணியாளர்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன.கடமையை செய்ய வேண்டுகோள் விடுப்பதில்லை;கட்டளை இடப்படுகின்றன.
                 அந்த அதிகாரி இந்த டிரைவர் இந்த இடத்தில் வேலை என்று கட்டளை இட ஏன்  தயங்குகிறார் என்று புரியாமலேயே கணேசன் திரும்பிவிட்டார்.சில நாட்களில் ஒரு டிரைவர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இனிமேல் தினமும் அவர்தான் வருவார் என்கிறார்.
               என்னப்பா ? என்னிடம் பணியாற்ற டிரைவர் எல்லாம் பயப்படுவதாக சொன்னார்களே ! நீ எப்படி சம்மதித்தாய் ? என்கிறார்.தவறு செய்யாமல் பணியாற்றும் பொது ஏன்  சார் பயப்படவேண்டும் ?எனக்கு 14 வருட சர்விஸ் ஆகிறது.இதுவரை ஒரு தண்டனையும் வாங்கியதில்லை என்று பெருமையோடு பதிலளித்தார்.



               கர்னல் கணேசன் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.சில நாட்களில் கர்னல் அதிகாலை புறப்பட வேண்டியிருந்தது.டிரைவர் எந்த தயக்கமும் இல்லாமல் வந்துவிட்டார்.போகும் வழியில் டிரைவரின்  குடும்பம்,தங்குமிடம் பற்றி விசாரித்தார்.சுமார் ஒரு வருடம்  அரசாங்க வீட்டில் இருந்துவிட்டு இப்பொழுது வாடகை  வீட்டில் சுமார்  10 Km தூரத்திலிருப்பதாகவும் வேலைக்கு வர மோட்டார் சைக்கிள் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
                   பயிற்சிப் படைப்பிரிவு தலைவர்கள் கால நேரம் கடந்து பணியாற்றவேண்டும்.அவர்களது டிரைவர் அரசாங்க குடியிருப்பில் அருகிலிருப்பது அவர்களது பாதுகாப்பிற்கு நல்லது.பணிமுடிந்து வந்த கர்னல் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு டிரைவருக்கு ஒரு அரசாங்க வீடு கொடுக்க உத்தரவிட்டார்.டிரைவர் சந்தோஷமாக தனது குடியிருப்பை மாற்றிக்கொண்டார்.
          ஒருநாள் டிரைவரின்  சீருடைகளைப்பார்த்த கர்னல் அது மிகவும் வெளுத்து இருப்பதைக்கண்டார். ஜவான்களுக்கு சீருடை காலத்தின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு இரண்டு சீருடை என்று வழங்கப்படுகிறது.உபயோகத்தைப்பொறுத்து அவை கலர் வெளுத்துப் போகலாம்.
                 கர்னலின் டிரைவர் சீருடை நன்றாக இருப்பது அவசியம்.கர்னல் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு டிரைவருக்கு ஆறு மாதத்திற்க்கு இரண்டு செட் சீருடை வழங்க உத்தரவிட்டார்.
                       ஒருநாள் அதிகாரிகளுக்கான விருந்து நடக்கவிருந்தது.டிரைவர் வந்து,ஐயா,மாலை எத்தனை மணிக்கு வண்டி வேண்டும் என்று கேட்டார். அதிகாரிகள் விருந்துக்கு தான் தனது காரில் போய்விடுவதாகவும் டிரைவர் தனது சொந்த வேலையைப்பர்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.மலையில் எல்லா அதிகாரிகளும் அரசாங்க வண்டியில் டிரைவர்களுடன் வந்திருந்தார்கள்.விருந்து நடந்து கொண்டிருந்த போது கர்னல் கணேசனின் டிரைவரைத்தவிர மற்ற எல்லோரும் அங்கிருந்தார்கள்.அப்பொழுது ஆரம்பத்தில் கர்னல் கணேசனிடம் பணியாற்ற பயப்பட்டவர்களும் அங்கிருந்தார்கள்.அவர்களிடையே கர் னலின் டிரைவரின்
சுகமான,பாதுகாப்பான ,கடமையுணர்வோடு கூடிய வேலை பற்றி வானலாவப்   புகழ்ந்து கர்னல் கணேசனிடம் பணியாற்றக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்களாம்.


                 இராணுவப்பணியிலும் தனது தனி வாழ்விலும் கர்னல் நல்ல ஒழுங்குமுறைகளைக் கடைபிடிப்பவர்.தவறுகள் திறுத்தப்படவேண்டும்;குற்றங்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோட்பாடு உடையவர்.அவர் பணியாற்றிய இடங்களிலும்.அவரிடம் பணியாற்றியவர்களிடமும் இந்த தாக்கத்தைக் காணலாம்.


























புதன், 4 டிசம்பர், 2019

                                       ஊரும் உறவும்.

   ஒரு மனித  உயிர் இந்த மண்ணில் பிரவேசிப்பது என்பது பொது விதி என்றாலும் எல்லா உயிர்களும் ஒரே மாதிரி மண்ணைத் தொடுவதில்லை.ஆகையினால் "'மண்ணின் மைந்தர்கள் "என்றால் தீப்பந்த வெளிச்சத்தில் கோரைப்பாய் மீது படுத்துக்கொண்டு "தக்க தசமதில் தாயோடுதான்படும் துக்க சாகர துயரிலிருந்து வெளிவந்து இந்த மண்ணைத்தோடும்   மகத்தானப் பேறு பெற்றவர்கள் மட்டுமே மண்ணின்
மைந்தர்கள்  என்ற அடைமொழிக்கு உரியவர்களாவார்கள்.


அப்படிப்பட்ட மண்ணின் மைந்தரான கர்னல் கணேசன் தனது பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக சன்னாநல்லூரில் 30-11-2019 அன்று ஒரு நூல் வெளியிட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்து ஒரு மாதத்திற்கு முன்பே எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். 



           கர்னல் கணேசனுக்கு மிகவும் நெருக்கமான நண்பரான Brigadier M.Sudanthiram,V S M.அவர்கள் கட்டாயம் வருவதாகவும் பெங்களூரிலிருந்து வானூர்த்தியில் திருச்சி வந்து இரவு அங்கேயே தங்கிவிட்டு 30 ந்தேதி காலையில் வாடகைக்காரில் சன்னாநல்லூர் வந்து விழாவை நடத்த்திவிட்டு மாலைக்குள் திருச்சி சென்று வானூர்தியில் பெங்களூர் போய்விடுவதாகத் திட்டமிட்டார்.
                எனது எழுத்துக்களை வெளியுலகத்திற்கு அறிமுகப் படுத்திய நண்பர் ,எழுத்தாளர்,பதிப்பாளர் திரு வையவன் அவர்களும் கட்டாயம் வருவதாக வாக்களித்திருந்தார்.அவர் சென்னையிலிருந்து காரில் வரவேண்டும்.
         வானிலை பயமுறித்துக் கொண்டிருந்தாலும் நவம்பர் 27 நானும் துணைவியும் சன்னாநல்லூர் சென்றடைந்தோம்.வானிலை நவம்பர் 30 திருவாரூர் மாவட்டத்தில் மழை கடுமையாக இருக்கும் என்கிறார்கள். 


                    இவைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கணேசன் விழா ஏற்பாட்டில் தீவிரமானார்.நன்னிலம் காவல் துறை அதிகாரிகளை சந்தித்து வாகன கட்டுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தார். சுமார் 50 பேர் வரலாம் என்று எதிர்பார்த்து பகலுணவுக்கு ஏற்பாடு செய்தார்.
           29 நவம்பர் அன்று மாலையே பங்களூரிருந்தும் கிருஷ்ணகிரியிலிருந்தும் நண்பர்கள் வந்து விட்டார்கள்.இரவு தங்க விடுதியில் ஏற்பாடு செய்தார்.


               எப்பொழுதும் கணேசனுக்கு உதவியாக இருக்கும் அவரது மைத்துனர் உடல்நலக் குறைவால் வரவில்லை.
            நவம்பர் 30 பொழுதுபுலர்ந்தது.இரவு முழுவதும் பெய்த கடும் மழையால் விழாவுக்கு ஏற்பாடு செய்த இடத்தில் ஒரு அடி மழை நீர் நின்றது.உணவுக்கு ஏற்பாடு செய்த இடம் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாக இருந்தது.உடனடியாக விழா ஏற்பாட்டை அந்த இடத்திற்கு மாற்றவும் விழா முடிவில்  அங்கேயே உணவுக்கும் மாற்றினார்.


            30 ந்தேதி காலையில் பெங்களூரிலிருந்தும்  தஞ்சாவூரிலிருந்தும் பாண்டிச்சேரியிலிருந்தும்,காரைக்காலிலிருந்தும் நண்பர்கள் வருவதாக ஏற்பாடு.
            அண்டார்க்டிக்காவில்  கணேசனுடன் பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரியும் ஒரு கடற்படை அதிகாரியும் வருவதாக ஏற்பாடு.
               சென்னையிலிருந்து தனி காரில் முதல்நாள் இரவே வந்துவிட்ட திரு வையவன் விடுதியில் இருந்தார்.
              விடாது மழை பெய்தாலும் இயற்கைக்காட்டிய இரக்கத்தால் அவ்வப்பொழுது சற்று இடைவெளியிருந்தது.கூட்டம் கூட ஆரம்பித்தது.
               கணேசனே விழா நடத்துபவர்,ஒருங்கிணைப்பாளர்,வரவேற்புரை செய்பவர்,விருந்தினர்களை அறிமுகப்படுத்துபவர்.
                   விழா இனிதே ஆரம்பமானது.





















              விழாவின் நிறைவாக திருமதி அனந்தலக்ஷிமி நன்றி கூற விருந்தினர்கள் பகல் விருந்துக்கு கலைந்தனர்.





           சில முக்கிய விருந்தினர்கள் ;
         
                         Brig. M.Sudanthiram,VSM.
                        Commodore.B.Ravinder
                          Mr.Vaiyavan.
                       Dr.Sambandamoorthy.
                       Dr.S.Amutha.
                          Mr.Vedachalam &15 from Karaikkaal.
                        Maj vijayakumar.
                       H/Capt Rajan,Santharaj & 20 Ex servicemen.
                       Chief Petty offr K.Rajkumar
                          B.Ramanathan
                         Maj.Ganesan.
                      20 From Sembiyanalloor.
                         15 From Sannanallur.
            
மொத்தத்தில் சுமார் 120  பேர்கள் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர்.
                     காவல் துறைக்கு நன்றி.
 மழையையும் பொருட்படுத்தாமல் கர்னல்  கணேசனுக்கு மரியாதை கொடுத்து  சிரமங்களை ஏற்று விழாவை சிறப்பித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
                விழாவுக்கு உறுதுணையாய் இருந்த நன்னிலம் ரோட்டரி நண்பர்களுக்கு நன்றி.
                               



                      வணக்கம்.