புதன், 11 டிசம்பர், 2019

                               உத் திரவிடுவதா ! 
                                    வேண்டுகோள் விடுப்பதா ?

                 1989 March 26  கர்னல் கணேசன் ஒன்றரை ஆண்டுகால உறைபனி வாழ்க்கைக்கு பிறகு தாயகம் திரும்பினார்.உடனடியாக அவருக்கு பணியிடமாற்றம் தராமல் பதினைந்து நாட்கள் விடுமுறையும் பின்னர் இராணுவத் தலைமையகம் வரவும் உத்திர விடப்பட்டிருந்தது.
               
                 சிறிதுகால இழுபறி நிலைக்குப்பின் அவர் பெங்களூரு பயிற்சி மையத்தில் பயிற்சி  படைப்பிரிவு தலைவராக இட மாற்றம் பெற்றார்.01 Sep 1989 கணேசன் மெட்றாஸ் என்ஜினீயர் குரூப் என்ற பயிற்சி தளத்தில் படைப்பிரிவு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.



                     அதிகாரிகளுக்கான வண்டிகள் தனியாக பராமரிக்கப்பட்டு தேவைக்கேற்ப அனுப்பப்பட்டன.வண்டிகள் மாறினாலும் டிரைவர்கள் மாறுவதில்லை.ஆனால் கணேசனுக்கு மட்டும் தினம் ஒரு வண்டியாகவும் வேறு வேறு டிரைவர்களாகவும் வந்துகொண்டிருந்தார்கள்.இது சில நிர்வாகப் பிரச்சினையை ஏற்படுத்தியது.நாளைக்கு இத்தனை மணிக்கு வரவேண்டும் என்று சொல்லியனுப்பினால் மறுநாள் வேறு டிரைவர் தாமதமாக வந்து தனக்குத் தெரியாது என்பார்.




             கணேசன் வண்டிகளை நிர்வகிக்கும் அதிகாரியை சந்தித்து ஏன் நிரந்தரமான டிரைவரை அனுப்பவில்லை என்று காரணம் கேட்டார். அதற்கு அவர் கர்னல் கணேசனிடம் பணியாற்ற டிரைவர்கள் பயப்படுவதாகவும் இன்னும் சில நாட்களுக்குள் ஒரு டிரைவரை ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார்.
            இராணுவ தளத்தில்  கட்டளை இடப்படுகின்றனவா அல்லது வேண்டுகோள் விடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் கணேசனுக்கு ஏற்பட்டது.
                சுயநலமற்ற தனது எண்ணத்தின் நேர்மையிலும் தனிமனிதனாகத் தனது செயாக்கத் திறமையிலும் சிறப்பான ஒரு அதிகாரி தனது சொல்லிலும் செயலிலும் ஒரு கண்டிப்பு தன்மையைக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பவர் கணேசன்.தனது தலைமையின் கீழ் பணியாற்றுபவர்களை அப்படித்தான் அவர் உருவாக்குவார்.


               இராணுவப் பணிகளில் வேண்டுகோள் விடுப்பதற்கு எப்பொழுது அவசியமாகிறது.சட்டத்திற்குப் புறம்பாக ,நேர்மையற்ற வழிகளில் செல்லும்போது,தன்னால் முடியாது என்ற நிலை வரும்போது  தனது பணியாளர்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன.கடமையை செய்ய வேண்டுகோள் விடுப்பதில்லை;கட்டளை இடப்படுகின்றன.
                 அந்த அதிகாரி இந்த டிரைவர் இந்த இடத்தில் வேலை என்று கட்டளை இட ஏன்  தயங்குகிறார் என்று புரியாமலேயே கணேசன் திரும்பிவிட்டார்.சில நாட்களில் ஒரு டிரைவர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இனிமேல் தினமும் அவர்தான் வருவார் என்கிறார்.
               என்னப்பா ? என்னிடம் பணியாற்ற டிரைவர் எல்லாம் பயப்படுவதாக சொன்னார்களே ! நீ எப்படி சம்மதித்தாய் ? என்கிறார்.தவறு செய்யாமல் பணியாற்றும் பொது ஏன்  சார் பயப்படவேண்டும் ?எனக்கு 14 வருட சர்விஸ் ஆகிறது.இதுவரை ஒரு தண்டனையும் வாங்கியதில்லை என்று பெருமையோடு பதிலளித்தார்.



               கர்னல் கணேசன் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.சில நாட்களில் கர்னல் அதிகாலை புறப்பட வேண்டியிருந்தது.டிரைவர் எந்த தயக்கமும் இல்லாமல் வந்துவிட்டார்.போகும் வழியில் டிரைவரின்  குடும்பம்,தங்குமிடம் பற்றி விசாரித்தார்.சுமார் ஒரு வருடம்  அரசாங்க வீட்டில் இருந்துவிட்டு இப்பொழுது வாடகை  வீட்டில் சுமார்  10 Km தூரத்திலிருப்பதாகவும் வேலைக்கு வர மோட்டார் சைக்கிள் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
                   பயிற்சிப் படைப்பிரிவு தலைவர்கள் கால நேரம் கடந்து பணியாற்றவேண்டும்.அவர்களது டிரைவர் அரசாங்க குடியிருப்பில் அருகிலிருப்பது அவர்களது பாதுகாப்பிற்கு நல்லது.பணிமுடிந்து வந்த கர்னல் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு டிரைவருக்கு ஒரு அரசாங்க வீடு கொடுக்க உத்தரவிட்டார்.டிரைவர் சந்தோஷமாக தனது குடியிருப்பை மாற்றிக்கொண்டார்.
          ஒருநாள் டிரைவரின்  சீருடைகளைப்பார்த்த கர்னல் அது மிகவும் வெளுத்து இருப்பதைக்கண்டார். ஜவான்களுக்கு சீருடை காலத்தின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு இரண்டு சீருடை என்று வழங்கப்படுகிறது.உபயோகத்தைப்பொறுத்து அவை கலர் வெளுத்துப் போகலாம்.
                 கர்னலின் டிரைவர் சீருடை நன்றாக இருப்பது அவசியம்.கர்னல் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு டிரைவருக்கு ஆறு மாதத்திற்க்கு இரண்டு செட் சீருடை வழங்க உத்தரவிட்டார்.
                       ஒருநாள் அதிகாரிகளுக்கான விருந்து நடக்கவிருந்தது.டிரைவர் வந்து,ஐயா,மாலை எத்தனை மணிக்கு வண்டி வேண்டும் என்று கேட்டார். அதிகாரிகள் விருந்துக்கு தான் தனது காரில் போய்விடுவதாகவும் டிரைவர் தனது சொந்த வேலையைப்பர்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.மலையில் எல்லா அதிகாரிகளும் அரசாங்க வண்டியில் டிரைவர்களுடன் வந்திருந்தார்கள்.விருந்து நடந்து கொண்டிருந்த போது கர்னல் கணேசனின் டிரைவரைத்தவிர மற்ற எல்லோரும் அங்கிருந்தார்கள்.அப்பொழுது ஆரம்பத்தில் கர்னல் கணேசனிடம் பணியாற்ற பயப்பட்டவர்களும் அங்கிருந்தார்கள்.அவர்களிடையே கர் னலின் டிரைவரின்
சுகமான,பாதுகாப்பான ,கடமையுணர்வோடு கூடிய வேலை பற்றி வானலாவப்   புகழ்ந்து கர்னல் கணேசனிடம் பணியாற்றக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்களாம்.


                 இராணுவப்பணியிலும் தனது தனி வாழ்விலும் கர்னல் நல்ல ஒழுங்குமுறைகளைக் கடைபிடிப்பவர்.தவறுகள் திறுத்தப்படவேண்டும்;குற்றங்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோட்பாடு உடையவர்.அவர் பணியாற்றிய இடங்களிலும்.அவரிடம் பணியாற்றியவர்களிடமும் இந்த தாக்கத்தைக் காணலாம்.


























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக