புதன், 9 நவம்பர், 2022

                   காக்காக்   கோட்டூர்  முருகையன்.

                     காக்காக்   கோட்டூர்  என்ற ஊர் திருவாரூர் மாவட்டத்தில்  திருவாரூருக்கும்  சன்னாநல்லூருக்குமிடையில் உள்ளது.1963 ல் பொதுப்பணி துறை  பொறியாளர் வேலையைத்தூக்கி எறிந்துவிட்டு இராணுவ அதிகாரியாகத்   தேர்வாகியிருந்தேன்.இளமை முதல் எங்களை வழிநடத்திவந்த எங்கள் மூத்த அண்ணன்  பசுபதிக்குக் கூட இது தெரியாது.அவர் தெரிந்துகொண்ட பொழுது மிகுந்த   மன வருத்தத்திற்கு உள்ளானார் .

                பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறி என்னிடம்  இல்லை.உடல் வலிமையையும் மன  வலிமையையும் வளர்த்துக்கொண்ட நான் அதிரடி செயல்பாடுகள் நிறைந்த இராணுவ வாழ்க்கை நன்றாக இருக்கும் என நினைத்தேன்.மேலும் 1962 சீன ஆக்கிரப்பினால் பொலிவிழந்த தாய் திருநாட்டைக் காப்பது ஒவ்வொருவருடைய கடமை என்றுணர்ந்தேன்.ஐந்து அண்ணன்  தம்பிகளுடன் பிறந்திருந்த எனக்கு உயிர் ஒரு பொருட்டல்ல.

                   ஆனால் ,வீட்டில் மூத்த மகனாகப் பிறந்து எங்களை வழி                நட த்திவந்த  எங்கள் அண்ணனுக்கு  எங்கள் பரம்பரையிலேயே அறிமுகமில்லாத புதிய பாதையில் நான் பயணிக்க முயற்சிப்பது  கலக்கமாக இருந்தது போலும்.

                          இராணுவ வாழ்க்கைப்பற்றி தெரிந்துகொள்ள எங்கெங்கோ தேடி ஒரு ஒய்வு பெற்ற ஒரு இராணுவத்தினரைக் கண்டு பிடித்தார்.மறுநாள் அவரை சந்தித்து இராணுவ வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள சென்றோம்..அவர் காக்கா கோட்டூர் பக்கத்திலிருந்தார்.எங்களை அன்போடு வரவேற்றார்.அண்ணன்  விபரங்களைச்சொல்லி ,என் தம்பி இராணுவத்திற்கு தேர்வாகியிருக்கிறான்,அந்த வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் என்கிறார்.மிகவும் அலட்சியமாக என்னை மேலும் கீழும் பார்த்த அந்த இராணுவ  ஆள்,பேச ஆரம்பித்தார்.;

          தம்பி.! இராணுவ வாழ்க்கை கொஞ்சம் கடினமானதுதான்.ஆனால் சாப்பாடு,சம்பளம் எல்லாம் பரவாயில்லை. உனக்கு என்ன டிரேடு (Trade ) கொடுத்தார்கள் என்று கேட்டார். 

இந்த வார்த்தையை முதன் முதல் கேட்ட நான்,அப்படி ஏதும் கொடுக்கவில்லையே 

தம்பி ! இராணுவத்தில் சேரும் ஒவ்வொருவருக்கும் ஒரு டிரேடு  கொடுப்பார்கள்.கீழ் நிழலைப் பணிகளான துப்புரவாளர் ,சமையல்காரர் ,பாத்திரம் கழுபுபவ ர்கள்,முடி திருத்துவோர் போன்ற பணிகளுக்கு ஆள் எடுக்கும்போது அதை வெளியில் சொல்லாமல் இருப்பார்கள்.பயிற்சிக்குப் போகும்போதுதான் தெரியவரும். ஆகையினால் நீ கவனமாக இருக்கவேண்டும் .

              எனக்கு ஒன்றும் புரியவில்லை.என்ன சொல்லுகிறார் இவர்.? 

 பொதுப்பணித்துறையில் பொறியாளராக இருக்கும் நான் ஏன்  இப்படி கீழ்நிலை வேலைகளுக்குப் போகவேண்டும்.

         அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.இராணுவப்பயிற்சி முடிந்து  2 / Lt  என்ற அதிகாரியாக அமர்த்தப்படுவேன்.

           இதைக்கேட்டவுடன் ,மிக அலட்சியமாக பார்த்துக்கொண்டிருந்த அவர்,ஒரு மிரட்சியுடன் எழுந்து கொண்டார்.சற்றே உன்னிப்பாக என்னைக்கவனித்த அவர் என் கைகளை பற்றிக்கொண்டார்.

                    தம்பி ! என்னை மன்னித்துவிடுங்கள்.நம் பக்கத்து மனிதர்களின் எண்ண  வீச்சுக்கு அப்பாற்பட்டது இராணுவ அதிகாரிகளின் பதவிகள்.எனக்குத்தெரிந்து ஒருசிலர்கள்தான் சிப்பாயாக சேர்ந்து படிப்படியாக முன்னேறி ஓய்வுபெறும் முன் அதிகாரியாவார்கள்.இப்படி நேரடியாக அதிகாரிகளாகும் பேரதிர்ஷ்ட்டம் பெரும்பாலும் வட  இந்தியர்கள், உயர்குடிப்பிறந்தோர்,பெரும் பணக்கார வர்க்கத்தினர்க்குத்தான் கிடைக்கும்.நீங்கள் அதிகாரியாகப் போக இருப்பது பெரிய பாக்கியம்.அது ஒரு அரச வாழ்க்கை.சந்தோஷமாகப் போய்வாருங்கள் என்கிறார்.

                       அண்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சி.அப்படியே ஒரு ஜோஸ்யரைப்பார்த்து உயிருக்கு ஆபத்து ஏதும் வருமா என்று விசாரிப்போம் என்று  காக்காக் கோட்டூர் முருகையன் என்பவரிடம் அழைத்துச்சென்றார்.ஜோசியர் எனது ஜாதகத்தை பார்த்துவிட்டு குறிப்பிடும்படியான ஆபத்து ஏதுமில்லை,நன்றாக இருப்பார் என்று சொன்னார்.

                   நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தோம்.ஐந்து அண்ணன்தம்பிகள் ,இரண்டு அக்காள்  தங்கைகள்  என்ற பெரிய குடும்பத்தில் நான் ஒருவன் மட்டுமே மிகவும் சுசுறுப்பாகவும்,எல்லா வேலைகளும் செய்பவனுமாக  இருந்தேன் இரண்டு அண்ணன்களும் வெளியூரிலிருந்தார்கள்.அக்காள் திருமணமாகி கணவருடன் திருச்சியிலிருந்தார்.அப்பா,உடல் நலமில்லாத அம்மா,இரண்டு தம்பி ஒரு தங்கை என கிராமத்திலிருந்தோம்.

                         எனது இராணுவப்பணி பொருளாதாரத் தைப்பொறுத்தவரை மிகவும் உதவியாக இருந்தது.சின்ன அண்ணன்  ,தங்கை,  மற்றும் தம்பி திருமணம் முடித்தோம்.

          இராணுவப்பணி  எனது குடும்பத்தில் என்னைத் தனிமைப் படுத்திவிட்டது  என்றால் மிகையில்லை.மேலும்,இராணுவ வாழ்க்கையை நன் உயிரினுமேலாக நேசிக்க ஆரம்பித்தேன்.அதிகார வர்க்கத்தில் அவசரகால கமிஷன் அதிகாரி என்ற எனது நிலையை  பெரும்பாலோர் அலட்சியமாகவே  பார்த்தார்கள்.அவர்கள் முகத்தில் கரி யைப் பூசுமளவுக்கு நான் உடலாலும்,மனதாலும்,எனது செயல்பாடுகளால் நிரூபித்தேன்.

                               எனக்கு படைப்பிரிவு தலைமைக் கொடுக்க மிகவும் தயக்கம் காட்டியவர்களை மெய்சிலிர்க்கவைத்தது  எனது செயல் பாடுகள்.  எனது பெற்றோர்களது  ஆசிகள் எனக்குப் பூரணமாகக்கிடைத்தது.இறைவனின் தூதுவனாக எனது வாழ்க்கைத்துணைவி வந்தார்.அற்புதமான இரு ஆண்மக்களைப் பெற்றோம்.

                              இலையுதிர் காலம் போல்  உறவுகள் இப்பூவுலகைப்  பிரிய மீண்டும் வசந்தம் வரும் என்று நான் காத்திருக்கிறேன்."யான் பெற்ற  இன்பம் பெறுக இவ் வையகம் " என்பதுபோல் எனது பிறந்த ஊரில் "அகத்தூண்டுதல் பூங்கா "அமைத்து சரித்திரம் படைக்கத் தயாராகும் சன்னாநல்லூர் என்று செயல் பட்டுக்கொண்டிருக்கிறேன்.








 

                                 A Strange Personality.

                 Personality is the characteristic sets of behaviors, cognitions, and emotional patterns that are formed from biological and environmental factors, and which change over time.

                        I had quit a well paid Government appointment in 1963 and responded to the National Emergency to strengthen the Indian Army which had met a devastating defeat by the Chineese attack of 1962.After military training,commission and introductory training of the role Engineers in the Army in war and peace,I was posted to 44 Field Park Company,which was part of 6 Mountain Division.My company was located at Pithoragarh in UP-Nepal border.My Army life started on 17 Sep 1964.

                During basic military training ,I was awarded,"Atheletics Blazer " in appreciation of my physical fitness.On reaching Pithoragarh,the shiwalic ranges of Himalayas and the Kumaon,Garwali hills attracted me so much  that I was doing rock climbing almost every day.The soldiers of 44 Fd Pk coy had been sillently observing my activities.Inidenyly 44 Fd Pk coy is from Madras Engineering Group where the Regimental language of troops are Tamil,Malayalam,Telugu and Kanada.Being a Field area we used play games in the evening including Sundays.So,all ranks of the unit had been silently appreciating my physical fitness and my social activities with troops.In 1965,the unit moved to punjab and took part in the Indo-Pak war of 1965.

                 The time rolled on.I rose to the rank of Colonel.Commanded 4 Engineer Regiment ( Engr units were Re organised in 1965 into Regiments ans 44 Fd Pk became part of 4 Engineer Regiment.).I went Antarctica as India's research station Dakshingangotri commander,Commaned President's colours presentation Parade as Battalion Commander in M E G. I retired from the Army in 1994,but actively took on to social works.Estabished "Inspirational Park "in my native place Sannanallur and started conducting motivational and inspirational activities.

                               Some time in 2017,Colonel Ashok kumar,a friend of mine and a Madras sapper officer was giving a Talk at an Ex servicemen meeting in Hyderabad,and referred about my activities.One person from the audience got up and asked colonel Ashok,whether Colonel Ganesan was in Pithoragarh in 1964.Col Ashok was not knowing about that and simply gave Col.Ganesan's contact number and requesied that person to have direct contact with Col Ganesan.

                         On one fine morning Col Ganesan ,relaxiing in chennai received a phone call.The caller after customary greetings asked Col Ganesan,whether he remembers the Spr/clk in 44 Fd Pk who was the M T clerk .Ganesan  tried to recollec his memory and vaguely said some Rao .The caller was thrilled and replied it is Kondal Rao, now settled in Hyderabad and had very long recollection of events at Pithoragarh and other places.

                Col Ganesan also was wonder struck that after about 53 years Mr.Kondal Rao had contacted him.Not only that,both were recollecting day to day events of that period and bursting out laugh.For example,one day in Pithoragarh,in early morning fog a villager was taking about 50 of his goats for grassing.L/NK Khan,our driver took a blanket and stealthly drapped a goat and dragged to the unit lines.It was neatly skinned out and Briyani was served in lunch.Kondal Rao while eating briyani,was surprised as it was non meat issue day.So he asked the person eating next to him,how briyani was being served.L/NK Khan came rushing to Kondal Rao and warned him to quietly eat Briyani and go.But by that time Ganesan ,being an officer was briefed about all  and situation was kept under control.

                  When the above incident was recollected after 53 years,Both Ganesan and Kondal Rao were laughing a lot.There were many incidents like that.All most all unit personnel names they ere remembering and also their funny talks.Karuppannan was the key figure in the temple to sing prayer songs.He will compose some cinima songs mixed with devotional lines and end  with "Ramaa...Ramana.....Govinda.

                    Karunakaran,Munisamy,Hav Sudharsanan,Hav,Varadarajan,Hav Sreeramulu,and many more characters they were remembering. Kondal left the Army in 1968.He came to Hyderabad and wrote State Bank recruitment test and was employed in S B I..He rose to Branch manager level and retired.He got married and was blessed with two sons.Both the boys were brilliant and migrated to USA.By and large Kondal Rao was living a reasonably good life.He did not forget his younger days and liberally helped all those in poverty and sufferings.When ever he saw add in news paper seeking medical assistance,he went to the hospital,talked to the Doctor and Patient and extended financial assistance for the patients treatment.




                 When he came to know Colonel Ganesan's achievements and honesty and integrity,He was not surprised as he was a silent observer of Ganesan's early days at Pithoragarh. Now after renewing his contact Kondal Rao and his wife came to Madras to meet Col Ganesan.They had spent two days at chennai.when Kondal Rao came to know of Ganesan's project "Inspirational Park ",He expressed his desire to see the Park.So,next day bothe the families left for Sannanallur. Raos went arround,all the works like,motivation hall,cosmic library,and the Antarctic stone and was extreamely happy to see thoughts of Ganesan implanted on ground for the benifit of  Posterity.


                      Kondal Rao repeatedly went arround the flex boards and quotations displayed there.The library was full of Adventure books,spiritual leaders biographies,and motivational and inspirational books.Ganesan had spent about Rs.27 Lakh of his pension and still spending on this project.

                          Kondal Rao was fully satisfied with the growth of Col Ganesan as he observed him in 1964 and wanted to be associated with him in the Noble task of Nation building .He hesitatingly requested Col Ganesan,to accept a small donation for the growth of Inspirational Park.

             Kondal Rao and his wife donated Rs.One Lakh.

          


            Kondal Rao ,over the long period of service had developped great human qualities and instanly goes forward to help those who are genuinly in need.God had gifted him two sons who are equally philanthropists and helps others.

                       we pray to the ALL MIGHTY to Bless Kondal Rao and all his associates.











வியாழன், 15 செப்டம்பர், 2022

                              வீழ்வேனென்று  நினைத்தாயோ .

                      (  சிதைந்த வாழ்வும் சீரழியும் மனித நேயமும்.)

                      விதியென்னும் குழந்தை கையில் உலகம் தன்னை 

                      விளையாடக்   கொடுத்துவிட்டாள் இயற்கை அன்னை -அது

                       விட்டெரியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை 

                        வீழ்த்திவிடும் மேல் கீழாய் வியந்திடாதே.!

          2005 ம் ஆண்டு தனது உடல் நலத்திலும் திறமையிலும் நம்பிக்கை வைத்து ,எதிர்காலக்  கனவுகளுடன் இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவில் சேர்ந்தார் பிரபாகரன்.கனவுகள் மெய்ப்பட சென்ற இடத்திலெல்லாம் சிறப்பாக செயலாற்றிவந்தார். 


            இராணுவத்தின் புகழ் மிக்க அதிரடிப்படையான National Security Guard (N S G )என்னும் பிரிவுக்குதேர்வாகி  பயிற்சி முடித்து  அங்கு பணியாற்றி வருகையில் ஒருநாள் காலையில் இரண்டாம் தளத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்து நினைவுகளிழந்த நிலையில் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.

                   பிரபாகரனின் வாழ்க்கை தடம் புரண்டது. அவரது வருவாயை நம்பியிருந்த  குடும்பம் நிலைகுலைந்து.இராணுவ மருத்துவமனையில் இரண்டுவருட போராட்டத்திற்குப்பின் சக்கரநாற்காலிதான் துணை என்று இராணுவத்திலிருந்து  நூறு சாதவீத ஊனமுற்றோருக்கான ஓய்வூதி யமும் வாழ்நாள் முழுவதும் உதவியாளர் அலவன்சுடனும் பிரபாகரன் வெளியேற்றப்பட்டார்.  



         ஏராளமான திட்டங்களுடன் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனது கிராமத்திலிருந்து புறப்பட்ட பிரபாகரன் சுமார் பன்னிரண்டு வருடங்களுக்குப்பிறகு  சக்கர நாற்காலியில் வீடு திரும்பினார்.சற்றே தடம் மாறினாலும் தான் சாதிக்கப்பிறந்தவன் என்ற எண்ணம் மட்டும்  பிரபாகரனை விட்டு நீங்க வில்லை.

                                தொடர்ந்து தான் எழுந்து நடக்கவேண்டிய வழிமுறைகளைத்தேட ஆரம்பித்தார்.சென்னையில் உள்ள "மயொட் " ( Miot Multy Speciality Hospital ) முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய  உப கரணங்களுடன்  நவீன முறையில் சிகிச்சை அளிப்பது  பற்றி அறிந்து சென்னை வந்தார் .சுமார் 25 லட்ச ரூபாய் முன்பணம் கட்டினால்தான்  சிகிச்சை ஆரம்பிக்கப்படும் என்கிறார்கள்.மலைகளைப்புரட்டி கடல்களைத்தாண்டி எங்கெங்கோ முட்டி மோதி ,மனைவியின் தாலி உட்பட அடகு வைத்து பணம் கட்டினார் .



     இதோ ! எழுந்து நடக்கிறார் பிரபாகரன்.இப்போது மனித நேயம் மிக்கவர்களிடம் தனக்கோ அல்லது ஆசிரியைப்பயிற்சி முடித்துள்ள  தனது மனைவிக்கோ ஒரு வேலை தரும்படி இறைஞ்சுகிறார்.

                தொழிலதிபர்களும், கல்வியாளர்களும் நிறைந்த நகரத்தார் பெருமக்கள் வாழும் காரைக்குடியில் வசிக்கிறார் பிரபாகரன்.மருத்துவ பரிசோதனைகளுக்காக அடிக்கடி சென்னை மயோட்  மருத்துவமனை சென்றுவர வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.

                      மனிதநேயமிக்க பெருமக்கள் பிரபாகரனுக்கு ஒரு நிரந்தர வருவாய்க்கு உதவுங்கள் என்று கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.உயர் இராணுவ அதிகாரியானாலும் எண்பதாவது  அகவையில் பயணித்துக்கொண்டிருக்கும் கர்னல் கணேசன் என்னும் நான் உயிர்வாழும் வரை எனது ஓய்வூதியத்தில் ஒரு சிறு தொகையை  அனுப்ப முடிவுசெய்துள்ளேன்.

                         4  Engineer Regiment  என்ற படைப்பிரிவின் முன்னாள் தலைவனான நான் எனது  படைப்பிரிவைச்சேர்ந்த ஒரு சிப்பாய்க்கு நேர்ந்த தூரதிர்ஷ்ட்டத்தை நினைத்து வருத்தப் படுவதுடன் எனது மகனைப்போன்ற அவருக்கு ஓரளவே உதவ முடிந்தமைக்குப் பெருமைப்படுகிறேன்.


                பிரபாகரனின் கைபேசி எண்  9841664948.











                      

ஞாயிறு, 10 ஜூலை, 2022

                                   மண் மேடுகள். ......( தொடர்  )-2

                   பத்து அத்தியாயங்களடங்கிய  இந்த நாவலில் இது 2 வது. 

2. சன்னாநல்லூர்.

                    நல்லார்க்குத் தம் ஊரென்றூரில்லை நன்னெறிச்

                   செல்வார்க்குந் தம் மூறென்றூரில்லை யல்லாக்

                   கடைகட்குந் தம் ஊரென்றூரில்லை தங்கைத்

                   துடையாக்கும் எவ்வூருமூர்.

                                                                                                          -நான்மணிக்கடிகை

 

விபத்துகள் நேரத்தான் செய்கின்றன. எவ்வளவோ எதிர்பார்ப்புகளுடனும்  எவ்வளவோ பயிற்சிகளுடனும் வண்டி ஓட்டும் நமக்கு விபத்துகள் நேரும்போது அதற்கு விளக்கமே கிடையாது. அப்படி விளக்கத்திற்கு உட்பட்டு ஒன்று நடந்தால் அது திட்டமிடப்பட்ட செயல் என்று அதற்கு கிரிமினல் - சிவில் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுத் தண்டனை வழங்கப்படலாம். விபத்துகள், விபத்துகளே அன்றி அதற்கு விளக்கம் சொல்ல முடியாது. வண்டி சக்கரம் பின்னோக்கி ஓடுவது போல் ஒரு சில வினாடிகள் எனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.

பள்ளிப்பருவம்முடியும்வரைஎனதுவாழ்க்கைவித்தியாசமானதாகஇருந்தது. அம்மா அப்பாவுடன் அவ்வப்பொழுது வெளியூர் சென்று வந்திருந்தாலும் எனது உலகம் சென்னையைச் சுற்றியதுதான். துன்பம் என்பதற்கு அர்த்தம் புரியாத வாழ்க்கை. பணத்திற்கோ, பொருள் வசதிகளுக்கோ அல்லது அன்பிற்கோ நான் ஏங்கியவள் இல்லை. இளமையில் நகர வாழ்க்கைதான் உலகம் என்றிருந்த எனக்கு கிராமம் என்று ஒன்று உள்ளது என்றோ இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தைப் பெருமளவிற்கு பொறுத்தே உள்ளது என்றோ என் சிற்றறிவிற்கு எட்டாத இளம்வயது. அந்த வயதில் பட்டிக் காட்டிலேயேப் பிறந்து வளர்ந்து சென்னைக்குப் படிக்க வந்த தேவகி எனக்கு உற்ற தோழியானாள்.  சத்தியம், நேர்மை, பொய்பேசாமை, இனிமையான பேச்சு, உண்மையான அன்பு எல்லாம் அமையப் பெற்ற ஒரு மிகச்சிறப்பான பெண் அவள். அவளை முதன் முதல் சந்தித்தது இன்னமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

பள்ளிக்கூட இறுதி வகுப்பு முடிந்து கல்லூரி சேர்க்கைக்காக எல்லா கல்லூரிகளிலும் கூட்டம் கூட்டமாக மாணவ மாணவியர் குவிந்து கொண்டிருந்தநேரம். புகழ் பெற்ற பெண்கள் கல்லூரி ஒன்றில் நான் சேர்ந்து விட்ட இரண்டாம்நாள். மற்ற தோழியர்களுக்கு உதவும் பொருட்டு கல்லூரி சென்ற நான் கல்லூரி வளாகத்தில் ஒரு முதியவரும் ஒரு இளம் பெண்ணும் கண்ணீருடன் நிற்பதைக் கண்டு என்னுள் வழக்கமாக எழும் பிறர்க்கு உதவும் உணர்வு தோன்ற அந்தக் கிராமப்புற முதியவரிடம் போய் ஏதாவது உதவி வேண்டுமா என்று விசாரித்தேன். அந்தப் பெண் அன்று கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் தஞ்சை மாவட்ட கிராமப்புறமாதலால் பெண்ணை மாணவியர் விடுதியில் சேர்த்திருப்பதாகவும் முதன் முதலாகப் பெண்ணை யாருடைய துணையுமின்றி தனியாக விட்டுப் போவது கலக்கமாக இருப்பதாகவும் பெரியவர் சொல்லுகிறார். ஒருவினாடிநேரம்நான்அந்தப்பெண்ணைப்பார்க்கிறேன். வெளியுலகம் அறியாத ஒரு மிரட்சியை அவள் கண்களில் பார்த்தேன். அருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டு இன்று முதல் நான் தான் உனக்குப் பாதுகாவலர். எனது தந்தை ஒரு காவல் துறை உயர் அதிகாரி;  எனது தாய் ஒரு கல்வி அதிகாரி. சென்னையிலேயேப் பிறந்து வளர்ந்த எனக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை. இன்று முதல் நீ தான் எனது தங்கை மாதிரி.  கொஞ்சம் கூடப் பயப்பட வேண்டாம். ஐயா !  பெரியவரே ! நீங்கள் தைரியமாகப் போய் வாருங்கள். எங்கள் வீட்டு தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் பெண்ணுடன் பேசுவதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். நான் உங்கள் பெண் தேவகிக்கு உற்ற தோழியாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

அன்று அறிமுகமான நட்பு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டது கடைசி வரை தொடர்ந்தது. அறிமுகமாகி சில மாதங்கள் சென்று அரை ஆண்டு விடுமுறை வந்தது. நெல் காய்க்கும் மரங்களை நீ பார்த்திருக்கிறாயா? எங்கள் கிராமத்திற்கு வா, பார்க்கலாம் என்று தேவகி ழைக்க உண்மையாகவே நான் அந்த மரங்களைப் பார்க்கப் புறப்பட்டேன்.

பெண்மை மலர்ந்து இளமையின் அடிவாயிலில் கால்வைத்திருந்தநேரம். உடலில் ஏற்படும் பல மாற்றங்களை தனிமையில் தொட்டுப்பார்த்து எனக்கு நானே வியந்து கொள்ளும் ஒரு விடலைப்பருவம். அந்த நிலையில் கிராமத்து அறிமுகம் எனக்குள் வியப்பான தொரு உலகத்தைக்காட்டியது. சென்னையிலிருந்து புறப்பட்ட நாங்கள் மயிலாடுதுறையில் மாற்று வண்டி ஏறி நன்னிலம் என்ற ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது இருள் பிரியும் இளங்காலை நேரம். நன்னிலம் என்றஊர்  5  கி.மீ. தூரத்திலிருந்தாலும் சன்னாநல்லூர் என்ற இடத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு நன்னிலம் என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.

 

அது ஆடி-ஆவணி மாதம் என நினைக்கிறேன். எங்கு நோக்கினும் வயல்களில் நீர்த்தேக்கமும் நாற்றங்காலும் உழவும் நடந்துகொண்டிருந்தது. சன்னாநல்லூர் என்ற அழகாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். செந்நெல் விளையும் இந்த ஊருக்கு செந்நெல்லூர் என்று பெயர் இருந்து பின்னர் சன்னாநல்லூர் என்று ஆனதோ என்னவோ, காவிரியின் கிளை நதிகளான முடிகொண்டான்ஆறு தெற்கிலும் திருமலைராஜன் ஆறு வடக்கிலும் ஓடுகிறது. மயிலாடுதுறையில் காவிரியைத்தாண்டும் போது சிறிய வாய்க்காலாக ஓடும். அம்மா நதியைப் பார்க்கிறோம். இளமைத் திமிரில்எழில்பூத்துக் குலுங்கும் இள மங்கையைப்போல் கடல் போன்ற பேரிரைச்சலுடன் கூடிய அலைகளுடன் முட்டி மோதிக்கொண்டு கர்நாடகா மாநிலத்திலும் பின்னர் திருச்சி மாவட்டத்திலும் ஓடிவரும் காவிரி பூம்புகாரில் (காவிரிப்பூம்பட்டிணம்) கடலோடு கலக்கிறாள். மயிலாடுதுறையில் அவளைசந்திக்கும் போது எண்ணற்ற செல்வங்களைப் பெற்று இம்மண்ணுக்கு வழங்கி விட்டு காய்ந்து சருகாகிய ஒரு கிழவியை சந்திப்பதுபோல்  இருக்கிறது.

எனது செல்வங்களைப் பாருங்கள் என்பதுபோல் அடுத்தடுத்து மஞ்சளாறு, வீரசோழன், நண்டலார், நூலார், அரசலாறு, திருமலைராஜன்முடிகொண்டான், புத்தாறு, வெட்டாறு, ஓடம்போகி, கோரையாறு, பாமினியாறு என்று தஞ்சை மாவட்டத்தின் குறுக்கிலும் நெடுக்கிலும் ஏராளமான ஆறுகள் ஓடுகின்றன.

உலகமெல்லாம் ஓரினம் என்று கனவு கண்ட பாரதி சிந்து நதியின் மிசை நிலவினிலே, சேரநாட்டிளம்பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகளோட்டி விளையாடி வருவோம் என்று பாடினான். இன்று நாம் காவிரியின் நீர்ப்பங்கீடு காரணமாக முடிவற்ற போராக அண்டை மாநிலங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்.

கும்பகோணம்-நாகப்பட்டிணம்என்றமேற்கு,கிழக்குசாலையும், திருவாரூர்-மயிலாடுதுறை என்ற தெற்கு வடக்கு சாலையும் சந்திக்குமிடமே சன்னாநல்லூர், அழுக்குப் படிந்த உடலையும் அகந்தை படிந்த உள்ளத்தையும் நன்றாகக் கழுவிவிட்டு எங்கள் ஊருக்குள் வாருங்கள் என்று உலகத்திற்கு சொல்லாமல் சொல்லுவது போல் ஊரின் நான்கு திசை எல்லைப் புறங்களிலும் நீர் நிறைந்த குளங்களும் குளத்தின் கரையில் ஒருசத்திரமும் இருக்கின்றன. இந்தக் கிராமத்தின் பொலிவை வசந்தம், கோடை, மழை, குளிர் என்று ஒவ்வொரு காலத்திலும் கண்டு ரசிக்க ஒரு தனி உள்ளம் வேண்டும்.

உதிராத மலர் போன்று முதிராத எண்ணங்கள் கொண்டிருந்த அந்த இளமைப் பருவத்தில் கிராமத்தின் அறிமுகம் எனக்கு ஒரு பொன்னுலகத்தின் வாசலைத் திறந்து விட்டது போன்றிருந்தது. அழகிய சிற்றம்பலம் என்னும் தேவகியின் அப்பாவும் சித்திரப்பாவை என்ற தேவகியின் அம்மாவும் எனக்கு அறிமுகமாகிறார்கள். தேவகியின் அப்பாவை அன்று சென்னையில் ஒரு சில நிமிடங்களே சந்தித்திருந்தாலும் இப்பொழுதுதான் அவரையும் கிராமப்புற வாழ்க்கையையும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

!     இலக்கணம் இலக்கியம் என்று வாய் கிழியப் பேசியும், பட்டிமன்றம்போட்டும்போட்டிகள்நடத்தும்நகரவாசிகளே! ஒருமுறைஇப்படிநமதுகிராமங்களுக்குவாருங்கள். சிலருடையபெயரைக்கேட்டு, சிலஊர்களின்பெயரைக்கேட்டுப்பாருங்கள். உங்களதுஇலக்கியத்தின்இலக்கணத்திற்குஇவர்கள்விளக்கம்சொல்லுவார்கள்.

சன்னாநல்லூர் கிராமத்து அறிமுகம் ஒரு அற்புதமான இலக்கியத்தைப் படிப்பது போன்ற இன்பத்தை ஏற்படுத்துகிறது.. கெண்டைக்கால்வரைத் துணியைத்தூக்கிக்கட்டிக்கொண்டு,இளமைத் திமிரான ஈர்க்கும் இடைபுகா இள மார்பகங்களை முரட்டுத் துணியால் இழுத்துக் கட்டிக் கொண்டு, ஆளானஆடிமாசம் ... ஆசைவைச்சேன் உன் மேலத்தான்... போன்ற நாட்டுப் பாடல்களை பாடிக்கொண்டு வயலில் வேலை செய்யும் கிராமத்துப்பெண்களைக்காணுகிறேன்.நேற்றுவரை சென்னையில் ஷேக்ஸ்பியரை அலசிக்கொண்டிருந்த தேவகி இன்று திடீரென்று அசல் பட்டிக் காடாகமாறி வயலிலும் வீட்டிலும் வேலை செய்யும்போது நான் வியந்து போகிறேன். தாங்க முடியாத ஆச்சரியம் அன்பு இப்படி சொல்ல முடியாத எண்ணங்களின் கூட்டாகத் திண்டாடி அப்படியே அவளைக் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறேன்.

கிராமத்துப் பெண்ணான தேவகி ஆச்சரியத்துடன் தனது குருவும், ஆசிரியையும் தோழியும் பாதுகாவலருமானப் பரிமளாவைப் பார்க்கிறாள்இயற்கை வினோதங்களில் மனிதர்களல்லாத உயிரினங்களின் வாழ்க்கை முறை விந்தையானதுஒருமாடு கன்று ஈன்றால் ஓரிரு ஆண்டுக்குள் அந்த கன்று வளர்ந்து ஒரு முழு நிலை மாடாக உருவாகிவிடுகிறது. அந்நிலையில் அதன் உடல் வளர்ச்சி காரணமாக காளை பசுவைத் தேடுகிறது. பசு காளையை நாடி ஓடி தனது இன உறவின் தவிப்பைக் தணித்துக் கொள்கிறது. பருவ வயதினளான இவள் எதன் அடிப்படையில் என்னைக் கட்டித் தழுவுகிறாள்.

நான் வெட்கத்துடன் கிராமவாழ்க்கை முறை சொல்லிதேவகிக்கு

 இப்படிப் பட்ட வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்திய தற்காக

 நன்றி சொல்லுகிறேன்.அவளது பெற்றோர்களைப்பற்றியும் ஊர் உறவுகள் பற்

றியும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு மேலும் மேலும்

 விவரங்கள்கேட்கிறேன்.

தந்தை அழகிய சிற்றம்பலம்.எவ்வளவு அற்புதமான தமிழ்பெயர்.

இலக்கியவாதிகள் இந்த பெயரின் விளக்கமாக ஒரு காவியம்

 படைப்பார்கள்என  நினைக்கிறேன்.

ஊரில்விவசாயம்தான்முக்கியவாழ்வாதாராம். வேறுஎந்தவிதமானதொழிற்கூடங்களும்இல்லை. பஞ்சமர்கள்என்ற 5 விதமானமக்கள்ஊர்மக்களுக்குஎல்லாவேலைகளும்செய்கிறார்கள். தலைஅலங்காரத்திற்குநாவிதன்; துணிவெளுக்கவண்ணான்; மார்கழிமாதம்போன்றசமயங்களில்ஊரைஅழிவிலிருந்துகாப்பாற்றும்நோக்கன்; ஊரில்இழப்புகள்ஏற்படும்போதுஉதவிசெய்யவெட்டியான்போன்றோர்கள்இருந்தார்கள். இவர்கள்எல்லோருக்கும்பொதுஇடங்கள்ஒதுக்கப்பட்டிருந்தன. ஆடு, மாடுகளுக்குஆங்காங்கேமேய்ச்சல்நிலம்ஒதுக்கப்பட்டிருந்தது. நீர்நிலைகள்அற்புதமாகஒழுங்காகஅமைக்கப்பட்டுநீர்வரவும்வடிகாலும்சிறப்பாகஇருந்ததால்எந்தநிலையிலும்ஊரில்வெள்ளப்பெருக்குஏற்படுவதில்லை. கடற்கரைசுமார் 15 கி.மீ. தொலைவில்இருந்தாலும்ஊரில்நிலத்தடிநீர்தான்குடிநீர். வயல்வெளிகளுக்குக்காவிரிஆற்றுப்பாசனம்தான். ஊர்மக்கள்ஒற்றுமையாகஒருவருக்கொருவர்விட்டுக்கொடுத்துவாழ்ந்துகொண்டிருந்தகாலமது.

சுமாரான பள்ளிப்படிப்புடன் விவசாயம் பார்க்க வந்து விட்டவர் அழகிய

 சிற்றம்பலம். ஆனால் அன்றைய கிராமப்புற கல்வியில் சற்றே தமிழ் படிக்கத்

 தெரிந்தவர்கள் பெரிய புராணத்தையும், சிலப்பதிகாரத்தையும்

, திருவாசகத்தையும், திருவருட்பாவையையும் மேலும் கீழுமாக முன்னும்

 பின்னுமாகப் புரட்டிப் போட்டவர்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக இருந்தவர்

 அழகியசிற்றம்பலம். திருமணமாகி ஒரு பெண்ணுக்குத் தந்தையாக

 வாழ்ந்தாலும் அவர் ஒரு யோகி என்று நான் ஆணித்தரமாக சொல்லுவேன்

. தினமும்காலை  4 மணிக்கெல்லாம் அலாரம் இல்லாமலேயே

 விழித்துக்கொண்டு காலை க்கடன் களை முடித்துவிட்டு, விளக்கறியா

 இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது விம்முகின்ற குழந்தையினும் மிகப்

 பெரிதும் சிறியேன் என்ற திருஅருட்பா ஆறாம் திருமறையின் பிறப்பவம்

 பொறாது பேதுறல் பகுதியைப் படிப்பார். ஒருநாள், கல்லாப்பிழையும்,

கருதாப்பிழையும், கசிந்துருகி நில்லாப்பிழையும், நினையாப்பிழையும், நின்

 ஐந்தெழுத்தைச் சொல்லாப்பிழையும் துதியாய்பிழையும் தொழாபிழையும் 

எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே என்ற பட்டினத்தார் பாடல்களைப் படித்து நெஞ்சுருகுவார்.

மண்ணை நேசிக்கும் பெரும்பாலான கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை அப்படித்தான் இருந்திருக்கிறது. மாலை நேரங்களில் பல இடங்களில் கூத்துப்பாட்டும் புராணச் சொற்பொழிவுகளும் நடக்கும். இப்படிப்பட்டவைகளைக் கேட்டு கேட்டு வளரும் குழந்தைகளுக்கு நீதி நெறி விளக்கம் தன்னாலேயே விளக்கம் பெறும். அதனால் அவர்களதுவாழ்வில்பஞ்சமாபாதகங்களுக்குப்பயப்பட்டுஓரளவுநலமோடும்வளமோடும்வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

சித்திரப்பாவை என்ற தேவகியின் அம்மாவும் அவளது தந்தை அழகிய சிற்றம்பலத்திற்கு கொஞ்சமும் குறைந்தவர் இல்லை. சன்னாநல்லூருக்கருகில்சுமார் 10 கி.மீ. தூரத்திலுள்ள செம்பிய நல்லூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சித்திரப்பாவை. ராஜகுரு என்ற அவரது தந்தை உண்மையிலேயே ராஜகுரு தான். கிராமத்துப்        பஞ்சாயத்துத் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் செம்பிய நல்லூர் மக்களின் நல் வாழ்க்கைக்குப் பாடுபட்டவர்.

அப்படிப்பட்ட ராஜகுரு அவர்கள் சித்திரப்பாவை சுமார்  10 வயது சிறுமியாக இருக்கையில் அகால மரணமடைந்தார். சித்திரப்பாவைக்கு இரண்டு தம்பிகள் இருந்தனர். ராஜகுரு அவர்களின் துணைவியர் மூன்று குழந்தைகளையும் வைத்துக்கொண்டு தங்களுக்கிருந்த கொஞ்ச நில புலன்களின் வருவாயிலும் உறவினர்களின் அனுதாப ஆதரவுடன் வாழ்ந்து வருகையில் தான் அழகிய சிற்றம்பலத்துக் குடும்பத்தினர் பெண் தேடி வந்தனர். சற்றே வசதி படைத்த அவர்கள் தந்தை யற்ற பெண்ணாக இருந்தாலும் குடும்பத்திற்கேற்ற குண நலன்களைக் கொண்டவர் என்ற பலரின் ஒருமித்த கருத்தால் ஈர்க்கப்பட்டு அழகிய சிற்றம்பலம் &சித்திரப்பாவை திருமணம் நடந்தது.

அழகிய சிற்றம்பலம் பல விதங்களிலும் ஒரு உதாரண புருஷனாக வாழ்க்கை

 நடத்துபவர்.  நிறைய வசதிகள் இருந்தும் பேராசைப்படாதவர்.  பிறரது

 துன்பத்தைத் துடைக்க தன்னாலான எல்லா உதவிகளையும் செய்பவர். ஊரில்

 சிலர் கூட்டுக் குடும்பங்களாக இரண்டு மூன்று தலைமுறை என்று ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். நான்கு கட்டு ஐந்து கட்டு என்று பெரிய பெரிய வீடுகளாக இருக்கின்றன.  இன்றைய நவநாகரீக வாழ்வில் கூட்டுக் குடும்பம் உடைந்து போய் விட்டது என்றும் இளைய சமுதாயத்தினரிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது என்றும் சொல்லுகிறார்கள். ஆனால்இவைகள்இன்றும்சிலகுடும்பங்களில் காப்பாற்றப்படுகின்றன என்பதுதான உண்மை.

ஆணும் பெண்ணும் சரி சமமாகப் படித்து வேலை பார்த்தாலும் தனித் தனியாக பல இடங்களில் பல நாடுகளில் வாழ்ந்தாலும் குடும்பத்து நிகழ்ச்சி என்றும் ஊரில் ஒரு பொது நிகழ்ச்சி என்றும் நடக்கும்போது இவர்கள் இன்பமாக மகிழ்ச்சியாக வந்து கலந்து கொள்கிறார்கள்.

குடும்பக் கட்டுப்பாடு அறிமுகமாகாத நாளில் அழகிய சிற்றம்பலம் தம்பதியினர்க்குத் தேவகி ஒருபெண்ணாக எப்படித் தனித்துப் போய்விட்டார் என்பது ஒரு ஆச்சரியம்தான்.  காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம் என்ற பகைவர்களை அடக்கி ஆண்டவர் அழகிய சிற்றம்பலம். அவரது விளக்கப்படி திருமணம் என்ற பந்தம் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இல்வாழ்க்கை நடத்தவும் ஆதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் அடைக்கலம் தர ஏற்பட்ட உறவு என்பார். தங்களுக்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் பொழுது இருவரும் உடல், உயிர்உள்ளம் ஒன்றி இன உறவு கொள்ளவும் அதன் மூலம் சத்தியபுத்திரர்கள் தோன்றவும் வேண்டும் என்பார். இயற்கையில் மனிதனைத் தவிர எல்லா உயிர்களும் Cosmic Force என்னும் மாபெரும் சக்தியினால் நடத்தப்படுகின்றன. அதன்படி ஆடு மாடுகள் கூட தினமும் இன உறவு கொள்வதில்லை. கற்பமாகிய பெண் இனத்துடன் ஆண் இனம் மீண்டும் இன உறவு கொள்வதில்லை. இப்படி இயற்கையைப் படிப்பவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் சென்று முனைவர் பட்டம் வாங்கியவர்களைவிட அறிவு ஜீவியாக, ஆச்சர்யப்புருஷர்களாக இருப்பதைக்காணலாம். தேவகியின்தந்தைஅப்படிஒருயோகி,

கிராமப்புறங்களில் இன உறவு ஒரு பொழுதுபோக்குநிகழ்ச்சியாகவும் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது குடும்ப வளர்ச்சிக்கு உதவும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அங்கும் கூட தனி மனித உணர்வுகள் உயர்தர்ம நெறிகள் மதிக்கப்படுகின்றன. என்பதற்கு அழகிய சிற்றம்பலம் &சித்திரப்பாவை தம்பதியினரே ஒரு உதாரணம்.

மனித வாழ்வின் ரகசியங்களைத் தெரிந்து கொண்ட ஒரு ஞானிபோல் அழகிய சிற்றம்பலம் ஐயா பேசும் போது நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பதைத்தவிர எதிர் கேள்வி கேட்பதற்கோ வேறு விளக்கம் கேட்பதற்கோ தோன்றாது.

பிண்டம் எனப்படும் நமது உடம்பிற்கும் அண்டம் எனப்படும் வெளி உலகுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர் விளக்குவார். அண்டமும் பிண்டமும் ஒரு சில நிலைகளில் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்று நம் விஞ்ஞானிகள் வேதகாலத்திலேயே கண்டறிந்திருக்கிறார்கள்  என்பதைப்   படித்திருக்கிறேன்.ஆனால் நாம் அறிந்த பல வேத விற்பன்னர்கள் மட்டுமல்லாமல் நாம் அறியாத மாபெரும் சித்தர்களும் வித்தகர்களும் இம்மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னமும் வாழ்கிறார்கள் என்பதை அழகிய சிற்றம்பலத்தின் உருவில் அறிந்து நான் ஆச்சரியப்பட்டுப்  போகிறேன்.

அந்த இளமைப் பருவத்தில் கிராமத்தைப் பற்றிய ஒரு வித மௌனமான ஆக்கிரமிப்பு என்னுள் நடந்து ஒவ்வொரு முறை விடுமுறையில் தேவகி சன்னாநல்லூர் போகும் போதும் நானும் உடன் சென்று சில நாட்கள் அவர்கள் குடும்பத்துடன் தங்கி வருவது வழக்கமாகிவிட்டது.

காலம் ஓட நாங்கள் கல்லூரியின் கடைசி வருடத்தில் நுழைந்தோம். வழக்கம் போல் விடுமுறையில் தேவகியுடன் நான் சன்னாநல்லூர் சென்றேன். இப்படிப்பட்ட ஒரு நாள் தான் அந்த விபத்து நடந்தது.

ஏன் நடந்தது ?  எப்படி நடந்தது ?

என்று விளக்கம் சொல்ல முடியாமல் கிணற்றில் தண்ணீர் இழுக்கும் போது

 வழுக்கி விழுந்து சுவரில் தலை அடிபட்டு இரண்டு நாட்கள் கோமாவில்

 இருந்து விட்டு எனது இன்னுயிர்த் தோழி தேவகி மறைந்து விட்டாள். ஒரே பெண்ணைப் பறிகொடுத்து விட்ட அழகிய சிற்றம்பலம்தம்பதியினர் ஒடிந்து போயினர். அவர்களுக்காகவே அவர்களின் பெண்ணாகவே, தேவகிக்காகவே ,தேவகியாகவே இந்தக்கிராமத்தின் ஆக்கிரமிப்புக்காரணமாகவே நான் இன்னமும் எனது சன்னாநல்லூர் பயணத்தை தொடருகிறேன்.

ஒரு முறை அழகியசிற்றம்பலம் அவர்களிடம் கிராமப்புறத்தில், விவசாயக் குடும்பத்திலிருக்கும் நீங்கள் எப்படி இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று எண்ணாமல் இருந்துவிட்டீர்கள் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் சொல்லிய இரண்டு விளக்கவுரை என் பொட்டில் அடித்தது போன்று பதிந்து விட்டது.

கணவன் மனைவி கூடி இருப்பதனாலேயே குழந்தை பிறந்து விடும் என்று பலர் முட்டாள் தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குயிற் குஞ்சு முட்டையைக் காக்கை கூட்டு இட்டால் அயர்ப்பின்றி காக்கை வளர்க்கின்றது போல்... என்ற  திருமந்திரம் பாடலைக் கூறி அதற்கு விளக்கம் சொன்னார். தன் குழந்தை என்று எவருமே உரிமை கொண்டாட வேண்டியதில்லை என்றும் உயிர்வாழ்வன எல்லாமே இறைவன் படைப்பு என்றும் சொல்லுகிறார்.

பெற்றவர்கள் என்பவர்கள் இறைவனின் அருளைப் பெற்றவர்கள் என்றும் அதன் காரணமாக புற உலகில் அருவமாய் திரிந்து கொண்டிருந்த ஒரு உயிர் தன்வினை &பெறப்போகிறவர்களின் பிராராப்த கர்ம வினை காரணமாக சம்பிரதாயமுறையால் தந்தையாகப் பட்டவன் சுக்கிலப் பையினுள் வந்து ஒரு கோடியே ஒன்பது லட்சத்து அறுபதினாயிராம் கணப் பொழுது தங்கி பின்னர் அவனது கருணையினால் சம்பிரதாய முறையால் தாயாகப்பட்டவரின் கருவறை சேர்கிறது. அவளது கருணையினாலும் கவனிப்பினாலும்   6 கோடியே நாற்பத்தெட்டு லட்சம்கணப்பொழுது கருவறை வளர்ச்சி பெற்று தன் கர்மவினை தீர்க்க இம் மண்ணுலகில் பிரவேசிக்கிறது. அதற்கு நாம் எப்படி உரிமை கொண்டாடமுடியும். பெற்றவர்கள் இறைவனதுகட்டளையைநிறைவேற்றுகிறார்கள்; அவ்வளவுதான்.

 அருணகிரி நாதரின் திருப்புகழில் ஒரு பகுதி எடுத்துக்கூறி எந்தக் காலத்தில் கற்பம் தரித்தால் எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் என்று விளக்கம் சொல்லுகிறார் அழகியசிற்றம்பலம், ஆக தனக்கு ஒரே ஒரு குழந்தையாக தேவகி பிறந்ததும் அவள் இப்படி இளம் வயதில் மறைந்ததும் இறைவன் செயல் என்கிறார்.

எழில் பூத்துக் குலுங்கும் இளமைப்பருவத்தில் ஆண்மைத்திமிரில் அடங்கிப் போயிருக்க வேண்டிய என் ஆருயிர்த் தோழி தேவகியின் உடல் இப்படி கருகிப் போனது ஒரு பேரிடியாக என்னைத் தாக்கியது. திருமணம் என்ற பேச்சை எடுக்கும் போதெல்லாம் எனது தோழியின் உருவமே எதிரில் நிற்க நான் இளமைப் பருவம் கடந்து போகிறேன். போலீஸ் அதிகாரியானாலும் முரடரானஅப்பா, கல்வி கேள்வியில் சிறந்து கலையுணர்வோடிருந்தும் பிடிவாத குணமுடைய அம்மா, இப்படி இவர்கள் ஒத்துப் போக முடியாத பிளவுபட்ட குடும்பச்சூழலில் நான் மணம் வீச முடியாத மலர் போலும் வாசிக்கப்பாடத வீணைபோலவும் உலவி வருகிறேன். ஆனாலும் எனது தனி வாழ்க்கை இருண்டு போய்விடாமல் மேலும் படித்து முதுகலை பட்டமும் பின்னர் மனோதத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றேன்.

சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், உயர்கல்விகற்றாலும், உயர் மட்ட மக்களுடன் உலவி வந்தாலும் எனது ஆருயிர் தோழி தேவகியின் தாக்கம் என்னுள் ஆழ்ந்த, அழிக்க முடியாத மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. சன்னாநல்லூர் என்ற அந்த கிராமத்து மண் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் இனிமையான நினைவுகளையும், தேவகியுடன் பழகிய நாட்களையும் ஆழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்குக் கொண்டு வந்து விடும். அந்தமண்ணின் பெருமையா? அதில் தோன்றி வளரும் மனிதர்களின் ஈர்ப்பா என வித்தியாசப்படுத்த முடியவில்லை. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம். மனம் சற்றே இளைப்பாற நினைக்கும் போதெல்லாம் நான் சன்னாநல்லூர் சென்று விடுகிறேன்.

                                         

                                              அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

 

 


 




.



 


 

 









திங்கள், 4 ஜூலை, 2022

                                                 மண்மேடுகள்.(தொடர்...)

 கதைக்களம். 

                   இராணுவத்தில் பணியாற்றியவர்கள் -அதாவது சோற்றுப்பிழைப்புக்காக இராணுவத்திலாவது சேரலாம் என்றில்லாமல் சீருடையை நேசித்தவர்கள்,இராணுவ சம்பிரதாயங்களைப் பெருமையோடு கொண்டாடுபவர்கள் ,இராணுவத்தில் சுமார் 20-25 ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும் எல்லைப்புறம்கூட பார்காதவர்கள்,இயற்கைப் பேரிடர்களைக்கலையை முன்னிற்காதவர்கள் ,போர்க்களம் காணாதவர்கள்,உலகிலேயே பழமையான,விண்ணுக்கும் மண்ணுக்கும் இலக்கணம் வகுத்த தமிழ் மொழியின் பன்முகப் பரிமாணத்தை உணராதவர்கள்  என இராணுவத்தினரை பலவிதமாகப் பிரிக்கலாம். 

                        இப்படிப்பட்ட மனிதர்களுக்கிடையில் ,ஒரு வித்தியாசமான மனிதரை நாம் சந்திக்கப்போகிறோம்.

                          எல்லைப்புறங்கள் ,இதய வாசல்,

                   தொல்லைகொடுக்கும் பகைவர் படைகள்,

                  அன்னை பாரதம் அழுகின்றாள்;

                  ஆண்மையுள்ளோரை அழைக்கின்றாள்.......     

                    இந்த அழைப்பை ஏற்று சீருடை அணியவந்த சிங்கமென உலாவரும் அந்த மனிதர் .அவருடைய குண நலன்களை வெளியுலகுக்கு தெரிவிக்க வந்தவர் போல் அவரை பல இடங்களில்,பலவிதங்களில்,நேர்காணல் காணும் ஒரு முனைவர் பட்டம் பெற்ற தனியார் நிறுவன உயர் அதிகாரி,இவர்கள் ,தனித்தும் இணைந்தும் சமூக நலனுக்காக செயல்படும்  விதம்.இவர்களது செயல்பாட்டில் இடை இடையே வந்து போகும் சில மனிதர்கள்.இவர்களே கதை மாந்தர்கள்.

                          இமயம் முதல் குமரி  வரை என்றும் காந்தாரம் முதல் பர்மா வரையிலும் என விரிந்து பரந்த இந்தியத் திருநாடே கதைக் களம் .அவர்கள் காத்திருக்கிறார்கள் ......! வாருங்கள் ! அவர்களை சந்திப்போம் 

1.அறிமுகம் .  

                              ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறுபோல்,

                                    மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ ?

                                    கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா 

                                   வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்தவேணுமே. 

                                                                                               -    சிவ  வாக்கியார் 

புவியியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்கள் அண்டங்கள் பற்றியும் அவை வெளிப்படுத்தும் அதிசயங்கள் பற்றியும் ஏராளமான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.நமது ஆய்வுகளுக்குள்ளான சூரிய மண்டலமும் அதன் ஆளுமைக்குள்ளான கோள்கள் மட்டுமல்லாமல் கோடான கோடி அண்டங்கள் இந்த பால் வெளியில் மிதந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள்.நமது பூமி உருண்டையைப்பற்றி ஆய்வு நடத்துவோர்  சுமார் 600 கோடி வருடங்களுக்கு முன் உலக நிலப்பரப்பு "பாங்கியா" என்ற மாபெரும் கண்டமாக ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தது என்கிறார்கள்.கண்டங்களின் ஈர்ப்பிசைபற்றிய அறிவு விளக்கம் ஏற்பட்டபொழுது இந்த "பாக்கியா  " என்ற மாபெரும் கண்டம்இரண்டாக்கப் பிரிந்து "கோண்டுவானா,மற்றும் "லாவ்ரெழியா "என்றாகியது என்றும் பின்னர் கோண்டுவானா பிரிந்து தென்னமெரிக்கா ,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா,இந்தியா மற்றும் அண்டார்க்டிகா என்றாகியது என்று விளக்கம் சொல்லுகிறார்கள்.

               ஆர்வம் காரணமாக புவியியல் பற்றி அறிந்துகொள்ள முற்பட்டாலும் அலுவல வேலை காரணமாக உலகின் பல பகுதிகளுக்கும் அவ்வப்பொழுது சென்றுவரும் எனக்கு இப்புண்ணிய பாரதம் பிறந்த நாடாக அமைந்தது எனது பூர்வ ஜென்ம பலனாக இருக்கலாம்.எண்ணற்ற மாமனிதர்கள் இந்த மண்ணிலே பிறந்து மனிதகுலம் தழைக்க தம்மை வருத்தித் தவமிருந்து பல உண்மை விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.தொலைதூர பயணத்தின் போது அதுபோன்ற விளக்கவுரைத் தொகுப்புகளை உடன் எடுத்துச்சென்று நேரம் கிடைக்கும்போது படித்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பது எனது வழக்கம்.

                 இப்படி அலுவலக வேலை காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களையும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருந்தாலும்,இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏனோ என்னைக் கவர்ந்திழுக்கிறது.மிக,மிக சாதாரண வாழ்க்கை முறையுடைய மக்கள் .வியாபாரம் காரணமாக பல வியாபார சமூகத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு இடம் பிடித்துக்கொண்டாலும் கிராம புறங்களில் அஸ்ஸாம் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இல்லை.

                இந்தியாவில் ஓடிவரும் நதிகளிலேயே ஆண்மைப் பெயர்கொண்ட பிரம்மபுத்திரா  நதி தன்  பெயருக்கேற்ப  மழைக்காலத்தில் ஒரு வெறிகொண்ட ஆண் மகனைப்போல் எங்கும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.இமயத்தின் மடியில் மானசரோவர் மலைப்பகுதியில் உருவாகி "போ "என்ற பெயருடன் திபெத்திய மலைப்பகுதிகளில் கிழக்கு நோக்கி ஓடிவரும் நதி அருணாச்சல பிரதேசத்தின் உயர்மலைக் காட்டுப்பகுதிகளில் மறைந்துபோய்விடுகிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய  நிலசீரமைப்பாளர்களில்பலர் "போ "நதி எங்கு போகிறது என்று கண்டறிய முற்பட்டு சில இடங்களுக்குப்பிறகு காணாமல் போயிருக்கிறார்கள்.விண்ணில் புகைமூட்டம்போல் காணப்படும் இடத்தில் இந்த நதி ஒரு மாபெரும் நீர்வீழ்ச்சியாக ஆயிரக்கணக்கான அடி பள்ளத்தில் பாய்கிறது என்று அனுமானித்திருக்கிறார்கள்.

                       கவனத்தில் கொள்ளுங்கள்-இது ஒரு அனுமானம்தான்.எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி பெற்றிருக்கும் இன்றுகூட (2021)"போ "நதி எங்கு மறைத்து, எப்படி வெளிப்படுகிறது என்பதை யாராலும் துள்ளியமாக  அறிய முடியவில்லை.

                இயற்கையின் மாபெரும் சக்திக்கு இது ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.தொட்டனைத்தூறும் மணற்கேணிபோல் இயற்கையின் ரகசியங்கள் ஒவ்வொரு யுகத்திலும்,ஒரு புது செய்தியாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.North East Frontier Agency (N E F A ) என்று முன்னாள் அறியப்பட்டு இன்று ஐந்து மாவட்டங்களைக்கொண்ட அருணாச்சலப்பிரதேசம் எனப்படும் மாநிலத்தில் லோஹித் மாவட்டத்தில் வெளிப்படும் மாநதியே பிரம்மபுத்திரா என்று அனுமானிக்கிறார்கள்.ஆற்றுப் பயணம் என்று கடலின் சங்கமத்திலிருந்து மேல்நோக்கிப் பயணிப்பவர்கள் லோஹித் மாவட்டத்தின் காட்டுக்குள் இன்றுவரை நுழைய முடியவில்லை.திருமந்திரம் வழங்கிய திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதை விவாதப்பி பொருளாக ஏற்று பட்டிமன்றம் நடத்தும் மக்களுக்கிடையில் "போ "நதியின் பள்ளத்தாக்கில் ஆயிரம் வருடங்களுக்கு மேலான வயதுடைய  மாமுனிவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.



                    குடிசைவீடே பிரம்மபுத்திராவின் வெள்ளப்பெருக்கில் மிதந்துகொண்டிருந்தாலும் வீட்டின் கூரைமேல் உட்கார்ந்துகொண்டு தூண்டில் போட்டு மீன்பிடிக்க முயற்சிக்கும் இந்த அஸ்ஸாம் மக்களின் வெள்ளந்தியான மனமும் உலகைப்புரிந்துகொள்ள முடியாத அறியாமையும் என்னை வியப்பிலாழ்த்தும்.நாள் முழுவதும் இப்படித் தூண்டில் போட்டுக்கொண்டிருந்தாலும் சுண்டு விறல் அளவுக்கு ஒரு மீன் கிடைத்துவிட்டால் அவர்கள் துள்ளிக்குதித்து தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.பெரும்பாலும் ஆண்கள் சோம்பேறிகளாகத் திரிகிறார்கள்.இனப்பெருக்கம் செய்வதுதான் அவர்களது முக்கிய வேலைபோல் சாலையின் பல இடங்களிலும் கூட்டம் கூட்டமாக அரைநிர்வான -முழுநிர்வானக்  குழந்தைகளைக் காணலாம்.இந்த மழை வெள்ளத்தினூடே நாலைந்து வாழை மரங்களை ஒன்றாகக்கட்டி ஒரு தெப்பம் போல் செய்து அதை அங்கும் இங்கும் போய்வர உபயோகிக்கிறார்கள்.திருமணம் வரை ஒழுங்காக உடை உடுத்தும் பெண்கள் திருமணத்திற்குப்பின் இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று ரவிக்கை அணிவதில்லை போலும்.ஆனாலும்  வயதுப்பெண்கள் தங்களது பள்ளிக்கூட சீருடையான பச்சை பார்டர் போட்ட வெள்ளைப்புடவையும் பச்சை வவுக்கையும் போட்டுக்கொண்டு கையில் ஒரு கோலுடன் ஒரு தேவதைபோல் அந்த வாழைமர தெப்பத்தில் வருவதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன்.

                 அவ்வப்பொழுது இனக்கலவரத்தினாலும்,பொருளாதார பிரச்சினைகளாலும் ஊர் ஊராக  வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன.மூங்கிலியும் கோரைப்புற்களாலுமான வீடுகள் வெகு சீக்கிரம் சாம்பலாகிப் போய்விடுகிறது.

                  "ஹட்ஜாவோ .........ஹட்ஜாவோ" 'என்ற உரத்தகுரலும் தொடர்ந்து ஒரு போர்ட்டர் தலையில் சாமான்களுடன் வேகமாக வருகிறான்.ஒரு ரயில்வே  சந்திப்புக்கே உரித்தான நெரிசலுடனிருக்கும் இந்த  நியூ  பொங்கைகாவ்ன்  ஸ்டேஷனில்சமீபத்திய இனக் கலவரத்தினால் ஏற்பட்ட கொலை,கொள்ளை வெறிச்செயல்களால் பல அஸ்ஸாம்  மக்கள் மேற்கு வாங்க நகரங்கள் நோக்கி தங்களது உடைமைகளுடன்  புறப்பட்டு விட்டதால் வழக்கத்திற்கு மாறான கூட்டம்.ரயில் பெட்டிகளின் கூரைமேல் கூட ஏறி மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். 

         பொதுவாக இயற்கையை ரசிக்கும் இயல்புடைய எனக்கு இந்த மக்களின் போராட்டமும் இதனால் சில மண் சட்டிகள்,பானைகள்,ஒரு ஆட்டுக்குட்டி, என்ற தங்களது உடமைகளை  எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்ட நிலை என்னுள் ஆழ்ந்த சிந்தனையைத்தூண்ட என் மன  ஓட்டத்தின் வேகத்தை போர்ட்டரின் சப்தம் தடுத்து நிறுத்திவிடுகிறது.

                  கண்ணாடியைக் கழட்டி துடைத்துவிட்டு திரும்பவும் போட்டுக்கொண்டு போர்ட்டரின் சப்தத்தினால் சிந்தனைக்கு கலைந்து சப்தம் வந்த திசையை நோக்கிப்  பார்க்கிறேன்.கல்கத்தா செல்லவிருக்கும் "காம் ரூப் "எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட இன்னும் சிறிது நேரமே இருக்கிறது.ஒரு நடுத்தர வயது மனிதர் போர்ட்டரின் பின்னே அவசரம் அவசரமாக ஓடிவருகிறார்.

                                ஜன்னலோரமாக நான் அமர்ந்திருந்த முதல் வகுப்பு  பெட்டிக்கருகில் சாமான்களைப்போட்டுவிட்டு சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த ரயில்வே கண் ட க்டரிடம் சென்று என்னவோ கேட்கிறார்.தனக்கு முதல்வகுப்பு ரிசர்வேஷன் கான்பெரம்என்று வந்தும் கூட தனது பெயர் லிஸ்டில் இல்லாதது குறித்து கோபமாகவும் வேதனையுடனும்  அவர் பேசுவது காதில் விழுகிறது.நமது நாட்டில் ரயில்வே பயணத்தில் இப்படி நடப்பது சர்வ சாதாரணம்.இந்தியன் ஆயில் கார்பொரேஷனில் ஒரு பெரிய உயர் அதிகாரியாக இருக்கும் எனக்கே பல நேரங்களில் இப்படி நடந்திருக்கிறது.பெண் என்றும் பாராமல் கண்டிப்பாக இடமில்லை என்று சொன்னதினால் பல நேரங்களில் நான் பயணத்தைக் கான்சல் செய்துவிட்டு ரயில்வே அதிகாரிகளுடன் சண்டை போட்டிருக்கிறேன்.

                        அவர் என்னவோ பேசிவிட்டு இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தபின் ஓய்ந்துபோய் நிக்கிறார்.பார்ப்பதற்கு தென்னிந்தியார் போலிருக்கிறார். மொழியறியா இம்மாநிலங்களில் நான் பயணம் செய்யும்போது தமிழர்களைப்பார்த்தால் இயற்கையாக வரும் ஒரு நட்புணர்வு எப்பொழுதும் தோன்றுவதுபோல் இப்பொழுதும் தோன்றுகிறது.இராணுவத்தினராக இருப்பாரோ ? இப்படி மொழியறியா இம் மாநிலங்களில் வழியறியா எல்லைப்புறங்களில் எதிகளுக்கும் இயற்கைக்கு கொடுமைகளுக்குமாக சின்ன பின்னமாக்கப்படும் இராணுவத்தினர் மீது எனக்கு எப்பொழுதும் ஒரு அன்பும் அனுதாபமுமுண்டு.இளம் வயதில் இராணுவத்தினர்களைப்பற்றி அதிகம் கேட்டிருந்தால் அவர்களிடம் ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டிருந்தது.திருமணம் என்ற ஒன்று ஆகியிருந்தால் ஒருவேளை யாராவது இராணுவத்தினரை மனந்திருப்பேனோ என்னவோ ?பள்ளி கல்லூரிப் படிப்பு என்று தொடர்ந்து ஏற்றுக்கொண்டவேளை எதுவாக இருந்தாலும் அதில் உள்ளம் ஒன்றுபட்டு ஈடுபடும் எனது மனப்பாங்கு என்னை ஒரு முதுகலை  பட்டதாரியாக்குகிறது. பின்னர் எம் பி ஏ ,மனோதத்துவதில் ஓரு டாக்டரேட் என்று வாழ்க்கைப்பயணம் எங்கெங்கோ திசை திரும்பிப் போய்விட்டது.பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருக்கும் இவர் யாராக இருப்பார் ?.

               Excuse me.! I am Parimalaa.Are you going to Calcutta ?If so,please get into the train.I shall arrange a berth for you.

              முன் பின் அறிமுகமில்லாமல் நான் பேசியதும் அவர் விழிக்கிறார்.எதோ பேச வாய் திறக்கிறார்.

                        Please......There is no time to discuss.Kindly get into the train. என்கிறேன். 

           அவசரம் அவசரமாக ஓடிவந்து ஏறிக்கொள்ளவும் வண்டி புறப்படவும் சரியாக இருக்கிறது.

                              நீரின் மேற் குமிழி  என்ற நிலையற்ற இவ் வாழ்வினிலே நாளும் பல புதுமையான மனிதர்களை  சந்தித்துப் பிரிகிறோம்.சந்தித்த அனைவரையுமே மனதில் கொள்ள நினைத்தால் இந்த இதயம் ஒரு குப்பைமேடாகிவிடும்.பிறகு எழிலோவியமான சில மனிதர்களுக்கோ இனிமை சிந்தும் அவர்களது நினைவுகளுக்கோ இந்த இதயத்தில் இடமில்லாமல் போய்விடக்கூடும்.இந்த விந்தையான மனிதரை சந்தித்ததும் அப்படித்தான்.. 

                          என்னை அறிமுகம் செய்துவிட்டு என்னோடு வரவிருந்த துணை அதிகாரி ரிசர்வேஷன்   செய்திருந்தும்கூட கடைசிநேரத்தில் வரமுடியாமற் போய்விட்டது.இது தான்  அவரது டிக்கெட்.So far all purposes you are Nirmal kumar Bhattacharya.! ! என்று அவரிடம் சொல்லுகிறேன்.

                          இலேசான புன்முறுவலுடன் ,Well !  I am Arvind,  என்கிறார்.

           அதுவரையில் ஆங்கிலேயத்திலேயே பேசிக்கொண்டிருந்த நான் அவர் பெயரைக் கேட்டவுடன் ,"நீங்கள் தமிழரா " ? என்கிறேன்.திடீரென்று அவர் தமிழராக இருந்துவிடக்கூடாதா என்ற ஒரு ஏக்கமான பரிதவிப்பு ஒரு வினாடி என் இதயத்துள் ஓடி மறைகிறது.

                       ஆம். ! என் பெயர் அரவிந்தன்.தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் ஒரு கிளைநதியோரத்தில் பிறந்தவன் நான். 1962ல் சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு இந்திய இராணுவத்தின் கரங்களை வலுப்படுத்த அவசரகால அழைப்பு விடுத்தபொழுது தமிழக பொதுப்பணித்துறையில் நிரந்தர பொறியாளராக இருந்த நான் அதை விட்டு விட்டு இராணுவத்தில் சேர்ந்தேன்.மனதாலும் செயலாலும் இந்தப் புனிதமானப் பணியை நான் விரும்புகிறேன். வெல் !  இருபதாண்டு காலம் ஓடிவிட்டது.

                        வழியெல்லாம் அவர் என்னென்னவோ பேசிக்கொண்டேயிருக்கிறார்.ஆச்சர்யமாக இருக்கிறது.இப்படியும் சில மனிதர்களா ?.ஏற்றுக்கொண்ட வேலையை ,அது எதுவாக இருந்தாலும் சில நாட்களிலேயே அதில் பல குறைகளைக்கண்டு வெறுப்பதும் அந்த வேலையே தங்களது முன்னேற்றத்துக்கான ஒரு பார்ட் டைம்  வேலையைப்போல் வைத்துக்கொண்டு சொந்த வேலைகளைக் கவனிப்பவர்களையும்தானே  நாம் பார்த்திருக்கிறோம்.அப்படிப்பட்ட சமுதாய சூழலில் இராணுவ வாழ்க்கையை -அதிலும் எல்லைப்புற கடினமான உழைப்பு,போர்நிலை தகுதிக்கானப் பயிச்சிகள் -உள்  நாட்டுக் கலவரங்களில் தங்கள் இன்னுயிர் சகோதரர்களையே  எதிரிகளாகப் பாவித்துப் போரிடவேண்டிய நிலை -இப்படிப்பட்ட வாழ்க்கையை -மிக மிக உள்ளார்ந்த உணர்வுடன் உடலும் மனமும் ஒன்றி நேசிக்கும் ஒரு மனிதரா ?

                           நான் மனம் நெகிழ்ந்து போகிறேன்.இவர் நல்லவர்.இவரைப்பெற்றவர்கள் நல்லவர்கள்.இவரைக் கணவராக அடையபெற்ற பெண் பாக்கியசாலி என்ற எண்ணமும் அதைத் தொடர்ந்து புறநானூற்று,மற்றும் கலிங்கத்துப்பரணி நிகழ்ச்சிகளும் மனதில் ஓடுகிறது.

             இராணுவத்தினர்களைப்பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லை என்றாலும் என் அம்மாவின் அப்பா இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியிருக்கிறார்.என் அம்மா பிறந்ததே பர்மாவில் மேமியோ-மேக்டிலா பகுதியென்றும் இராணுவ வாழ்வின் பெருமைபற்றி அம்மா அடிக்கடி சொல்லுவார்கள்.அம்மாவிற்கு சுமார் 10 வயதிருக்கையில் தாத்தா ஒய்வு பெற்றார் என்றும் சில நாட்களிலேயே இறந்துவிட்டார் என்றும் சொல்லுவார்கள்.ஆங்கிலேயர் ஆட்சியில் இராணுவத்தினர் பெரு மதிப்புப் பெற்றிருந்தனர் என்பார்கள்.நன்றிக்கடன்,கடமையுணர்வு,ராஜ விசுவாசம் போன்றவைகள் தமிழர்களுக்கு உலகிலேயே சிறந்த போர்வீரர்கள் என்ற பெயர் வாங்கி கொடுத்துள்ளது.திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் போரிட்டபொழுது இராணுவத்தினர் பலர் தங்கள் நாட்டு மன்னனானத் திப்புசுல்தானுக்கு எதிராக -தாங்கள் ஆங்கிலேயர்களின் கூலிப்படைகள் என்ற அவமானம் இல்லாமல் தங்கள் நாட்டு மக்களையே தயவு   தாட்சண்யமின்றி கொன்று குவித்து திப்புசுல்தானையும் தோற்கடித்திருக்கிறார்கள். அதற்கு ஈடுகட்டுவதுபோல்  தனியொரு மனிதனுக்காக பிரிட்டிஷ் அரசு "சொக்கலிங்கம் மெடல் "என்ற ஒரு கௌரவ விருதை ஏற்படுத்தி ஸ்ரீரங்கப்பட்டினம் போரில் இப்படி சிறப்பாகப்  பணியாற்றிய லான்ஸ் ஹவில்தார் சொக்கலிங்கம் என்ற மெட்றாஸ் பயோனியரைச்சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு வழங்கியதாக அம்மா சொல்லுவார்கள்.

                       இன்றும் கூட Madras Engineer Group  என்ற பெங்களூரில் உள்ள இராணுவப்பிரிவில் இந்த மெடல் வைக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்லாமல் அந்த குரூப்பைச்சேர்ந்த ஒரு பயிற்சிப்ப் பிரிவிற்குச்  சொக்கலிங்கம் கம்பெனி என்றே பெயரிட்டிருக்கிறார்களாம். 

                               இப்படி இராணுவ வாழ்க்கை பற்றி நிறையாக கேள்வி பட்டிருந்ததால் அரவிந்தனின் பேச்சும்,கொள்கையும் என்னை மிகவும் மகிழ்வுறச்செய்தன.  

                          அதுமட்டுமல்லாமல் எனது தந்தைவழி பாட்டனாரின் தமையன் தேசப்பற்று காரணமாக சுபாஷ் சந்திர போஸின் Indian National Army  (I N A )  யில் பணியாற்றியவர்.இரண்டாவது உலகமகாப் போரில் ஜப்பானியர்கள் இந்தியாவின் கிழக்கு கோடியில் பர்மாவின் கதவுகளை உடைத்தெறிந்து இந்திய எல்லையை மிதித்த பொழுது ஆங்கிலேய அரசின் புரட்சித் தளபதியான மேஜர் ஜெனரல் வின்கேட் தலைமையில் Chindit என்ற அதிரடிப் படை வீரர்கள்  பர்மா எல்லைக்குள் ஜப்பானியர்களின் பின்புறம் நுழைந்து பலப் பதுங்கிப்பாயும் போர்களைப்  புரிந்துள்ளார்கள்.அங்கு ஜப்பானியர்களுக்குத் துணையாக சுபாஷ் சந்த்ர போஸின் I N A  வீரர்கள் பணியாற்றியிருக்கிறார்கள் ..இப்படி நாட்டுப் பற்று-செஞ்சோற்றுக்கடன் என்ற உணர்வோடு எனது குடும்பத்தின் முன்னோர்கள் பணியாற்றியுள்ளது பற்றி நான் பெருமை கொள்வேன்.இன்றும் எங்கள் வீட்டில்,தாத்தா,முப்பாட்டனார்  போன்றோர்களின் இராணுவ உடையிலுள்ள புகைப்படங்கள் உண்டு.

                          ரயில் பயணத்தில் எதிரில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் இராணுவ அதிகாரியான அரவிந்தனைப்  பார்த்து நான் பெருமைகொண்டேன்.

                        கல்கத்தா வந்து பின்னர் சென்னை மெயிலில் இடம்கிடைக்காமல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் சென்னை சென்றடைந்தோம்.ஒருவரை சந்தித்த சில மணி நேரத்திற்குள் அவரது குடும்பம்,உறவு,குழந்தைகள் என்று தோண்டித்துருவி கேள்விகளைக்கேட்கும் வழிப்பயண நண்பர்களில் இவர் வித்தியாசமானவராகப் படுகிறார்.இராணுவ அதிகாரியாக இருந்தும் இராணுவத்திற்கும்அப்பாற்பட்டவிஷயங்களைத்தெரிந்துவைத்திருக்கிறார்.இலங்கைத்தமிழர்களின்  பிரச்சினை என்னவென்று மிகவும் ஆணித்தரமாகப் பேசும் இவர் வரும் ஒலிம்பிக் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்று விவாதிக்கிறார்.தனது சொந்த ஊரான "கண்கொடுத்த வணிதத்தில் "தென்னை சாகுபடி எப்படி செய்வார்கள் என்று சொல்லுகிறார்.அவரது ஊரின் பெயரே ஒரு இலக்கியச்சுவையோடு இருக்கிறது.

                          இப்படிப்பட்ட உத்தம நண்பர் தனது முகவரியைத்தந்துவிட்டு ,பயண உதவிக்கு நன்றி ,நாம் நண்பர்களாகப் பிரிவதற்கு எனது வாழ்த்துக்கள் ,விபத்துகள் நேர்ந்தால் நாம் மீண்டும் சந்திப்போம் என்ற வினோதமான வாழ்த்துக்களுடன் அவர் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனின் கூட்டத்தில் கலந்து மறைந்த போது ஒரு கனவு உலகத்திலிருந்து வந்தது போன்று உணர்கிறேன். 

           ஏன்டி  இப்படி பேயறைந்ததுபோலிருக்கிறாய்  ? என்ற தோழியின்  பேச்சு என்னை நினைவுலகத்திற்கு கொண்டுவருகிறது.

              சாமான்கள் சரியாக இருக்கிறதா மேடம் ? எனது அலுவலக அதிகாரிகள் சாமான்களை சரிபார்த்துக் கொடுக்க,நான் புறப்படுகிறேன்.அன்பான உபசரிப்புடன் கடந்த ஒருமாதகால வீட்டின் நிகழ்வுகளை டிரைவர் கண்ணுசாமி சொல்லிக்கொண்டேபோக வீடு வந்த சேர்கிறேன். 

                                                                                                                             2.சன்னாநல்லூர் .........


.