திங்கள், 25 ஜனவரி, 2021

                                                 விஜயபாரதம்.

இந்திய திருநாட்டின் சரித்திரம் பல மனிதர்களால் சிதைக்கப்பட்டு உண்மை நிகழ்வுகள் மறை க்கப்பட்டு அரசியல் ஆதரவுக்காக வெளியிடப்பட்டது என்பதை எல்லோரும் அறிவார்கள்.சுதந்திரப்போராட்ட காலத்திலேயே  உண்மையும் நேர்மையான சில மனிதர்களின் செயல்பாடுகள் வெளியுலகம் அறியாதவாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா என்ற மாபெரும் தேசம் சிதைக்கப்படாமல் சுதந்திரம் பெறவேண்டும் என்ற தியாக உணர்வோடு தொடங்கப்பட்டதுதான் "ராஷ்ட்ரிய சுயம் சேவக் " என்ற அமைப்பு.  காந்தியைக்கொன்ற "நாதுராம் கோட்ஸே "ஒரு தியாகி என்று போற்றப்பட்டு நாட்டின் பல இடங்களில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

கோட்ஸேயின் வரலாற்றைப் பின் நோக்கிப்பார்த்தல்  பல செய்திகள் வெளிவரும்.கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு கோர்ட்டில் நின்றுகொண்டிருந்த கோட்ஸேயின் வாக்குமூலத்தைப் பாருங்கள்.

“Gandhi was the reason for partition. He is the main reason for all the atrocities against Hindus during the partition. Gandhi acted in favour of Muslims. His presence will be harmful to Hindus. Hence, by killing Gandhi I did  great justice to this nation.” 


Godse said in the court that while people in general were against transferring Rs 55 crore to Pakistan after partition, Gandhi forced it upon the nation to transfer the money by going on a hunger strike. The Indian government too was hesititating to transfer the money. The Indian government and its people had to give way to one man’s adamancy, Godse had said justifying his act.

                 மத அடிப்படையில்  நாடு துண்டடாடப்பட்டபொழுது இந்தியா ஒரு ஹிந்துக்களின் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள ஏன்  தயங்க வேண்டும். அந்த அடிப்படையில் ஆரம்பித்ததுதான் "விஜய பாரதம் " என்ற வார இதழ்.
                  இந்தியாவின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் நான் விஜயபாரதம் படிக்க ஆரம்பித்தேன்.இந்தியா ஒரு மாபெரும் தேசம் என்பதையும்,இங்கு பல  ,மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும் மனதில் பதிய வைத்தால் முஸ்லிம்களுக்கென்று தனி நாடு கேட்கப்பட்ட பொழுது இந்தியா என்றபகுதியில் வாழ்பவர்கள் எல்லோரும் முஸ்லீம் அல்லாதவர்கள் என்றுதானே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
         மத ரீதியில் மக்களை பிரிக்காமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒற்றுமையாய் வாழ்ந்த நாட்டில் ஆங்கிலேயர்கள் கலந்த விஷம் இன்றளவும் தொடர்கிறது 
                                இந்நிலையில் விஜயபாரதம் இதழ் இந்துக்களின் ஒற்றுமைக்கும் இந்தியா என்ற மாபெரும் தேசம் மீண்டும் உலகப் புகழ் பெறவும் பாடுபடுகிறது என்று நான் எண்ணுகிறேன்.ஆகையினால் எனது இராணுவ வாழ்க்கை மற்றும்  செயல் பாடுகள் குறித்து அவர்கள் நேர்காணல் கேட்ட பொழுது மனமுவந்து பகிர்ந்து கொண்டேன்.
                             இதோ எனது நேர்காணல்;








இந்தியாவை எனது நாடு என்று ஏற்றுக்கொண்ட எத்தனையோ மதத்தினர்,முஸ்லிகள் உட்பட இந்திய இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள்.அவர்களது சிறப்பான செயல்கள் கவனிக்கப்பட்டு பாராட்டப்படுகின்றன.பிரிவினையின் போது ஏற்பட்ட போரில்  ஜம்மு-காஷ்மீர் பகுதி நவாஷ்ஷெரா பகுதியில் போரிட்ட பிரிகேடியர் "முஹமது  உஸ்மான் '" மஹாவீர் சக்ரா வழங்கி கௌரவிக்கப்பட்டார் .1965 போரில் 'பரம்வீர் சக்ரா "விருத்தி பெற்றவர் ஹவில்தார் அப்துல் ஹமீத் ,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
                        வாழ்க பாரதம்,! வாழ்க  பாரத மணித்திருநாடு. !!  



















1 கருத்து: