ஞாயிறு, 10 நவம்பர், 2019

                          இடைக்காலப் பிரிவேயன்றி 
                                       இறுதி வணக்கமல்ல. !

          தென்துருவப் பணிமுடிந்து இந்தியா திரும்பிய கர்னல் கணேசன் பெங்களூரிலுள்ள Madras Engineer Group & Centre என்ற இராணுவ தளத்தில் பயிற்சிப் படைப்பிரிவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
                    அங்கு மூன்று பயிற்சிப் படைப்பிரிவுகள் இருந்தன.அதில் Training Battalion -1 என்ற முதல் பயிற்சிப் பிரிவு தலைமையகத்திற்கு எதிரே  தலைமையகத்தின் எல்லா செயல்பாடுகளுக்கும் உதவுவது கூடுதல் பொறுப்பாகும்.கணேசன் அந்த No.1 படைப்பிரிவிற்கே தலைவராக நியமிக்கப் பட்டார்.
       
 ஒவ்வொரு பயிற்சி படைப் பிரிவில் சுமார் 2500.இளம் இராணுவப் பயிற்சியாளர்கள் பலநிலைகளில் பயிற்சியிலிருந்தார்கள் .ஒவ்வொரு தொழில் முறைக்கும் வித்தியாசமான கால அளவுகளில் பயிற்சி இருக்கும்.உதாரணமாக Carpenter என்ற trade க்கு பதினைந்து மாதப் பயிற்சி என்றால் டிரைவர் என்பவர்களுக்கு சுமார் இரண்டு வருடப் பயிற்சி இருக்கும்.ஒவ்வொருவரும் பயிற்சி முடிந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு
Combined Refreshar Training  என்ற ஒருங்கிணைந்த பயிர்ச்சி யளிக்கப்பட்டு எல்லைப்புறப் படைப்பிரிவுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
               கணேசன் தலைமைப்பொறுப்பு ஏற்றுக்கொண்டவுடன் பயிற்சி யாளர்கள் மனநிலையிலும் பயிற்சிகளிலும் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
                நாட்டின் பலஇடங்களில் நடைபெறும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு முற்றும் புதியவர்களாக இராணுவப் பயிசிப் படைப்பிரிவுக்கு வரும் இவர்கள்  அன்பாக வரவேற்கப்படுகிறார்கள்.
இது கர்னல் கணேசன் தயாரித்த வரவேற்பு கடிதம்.

                அதே சமயம் தங்கள் பிள்ளை எங்கு சென்றானோ எப்படியிருக்கானோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இது கணேசன் அனுப்பிய பாராட்டுக் கடிதம்.

             முன்பு சொல்லிய விதம் பயிற்சி நிறைவு பெற்று படைப்பிரிவு செல்ல இருக்கும் இராணுவத்தினருக்கு கர்னல் ஒரு பிரிவு உபசார விருந்து நடத்தி அவர்களை தங்களுக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதம் வாழ வாழ்த்தி வழங்கும் "இடைக்காலப்  பிரிவேயன்றி இறுதி வணக்கமல்ல " என்ற வாழ்த்து மடல் இது.

       
              இந்த மூன்று விதமானகடிதங்களும்தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மற்றும் ஹிந்தி  ஆகிய மொழிகளிலிருக்கும். தங்களது தாய்மொழியில் படிக்கும்போது அவர்களது மனதில் ஒரு புத்துணர்ச்சி பொங்கும் என்பதில் ஐயமில்லை.

இப்படிபைப்பட்ட அணுகுமுறை இணுவப் பயிற்சி யாளர்களிடையே  ஒரு மகத்தான மனநிலை மாற்றமும் அதன் காரணமாக தாங்கள் சாதிக்கவேண்டும் என்ற உந்துசக்தியையும் கொடுத்து உண்மையிலேயே அவர்கள் சரித்திரம் படைத்தார்கள் என்பதற்கு இன்று எழுபத்தியெட்டாவது அகவையில் பயணித்துக்கொண்டிருக்கும் கர்னல் கணேசன் தினமும் பெறும் கடிதங்கள் தொலைபேசி வாழ்த்துகளே உதாரணம்.
                  சிப்பாயாக சேர்ந்து கர்னல் கணேசனிடம் பயிற்சி பெற்று  Subedaar &Hony Lt  ஆகப் பணிநிறைவுபெற்ற திரு மகாராஜன் அவர்களிடம் முகநூல் பார்வையாளர்கள் நேரிடையாகப் பேசலாம்.
                அவரது அலைபேசி எண் 7382985929
   இதன் தொடர்ச்சியாகவே பணி  நிறைவுபெற்ற கர்னல் கணேசன் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே இது போன்ற மாற்றங்கள் ஏற்பட தனது சொந்த நிலத்தில் "அகத்தூண்டுதல் பூங்கா "அமைத்து பல நிகழ்சிகளை நடத்துகிறார்.
               எதிர் வரும் நவம்பர் 30 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் கிராமத்தில் அகத்தூண்டுதல் பூங்கா வளாகத்தில் கர்னல் கணேசன் அவர்களது இரண்டு நூல்கள் 
             "எல்லை புறத்தில் ஒரு இதயத்தின் குரல்"'
                         " சிவந்த மண் கைப்பிடி நூறு "

            புகழ்பெற்ற "தாரணி " பதிப்பகத்தார் அவர்களால் வெளியிடப்பட இருக்கிறது.

                       அனைவரும் வருக  !           அமுதம் பருகுக. !.

              தொடர்புக்கு 9444063794,9884060671.



                                                              வணக்கம்.









1 கருத்து:

  1. சிறப்பான பணியை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளீர்கள். வெளியீட்டு விழா சிறப்பாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு