ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

                                  Continuing..........Venpaip parappilum.....

                  O1 December 1942 born Colonel Pavadai Ganesan  is from Corps of Engineers of the Indian Army.He was commanding an Engineer Regiment from November 1984.Generally the Command appointments are limited to 2-3 years in order to give more oppurtunities to eligible officers.So Ganesan was expecting his transfer order any time early 1987.


                  It was heaven sent oppurtunity that in April 1987 Army head quarters had called for volunteers to be leader of Indias 5 th winter team to Antarctica.The QR specified were looking like tailor made for Ganesan.The family conditions also were suiting him.His two children were 12 years and 7 years. so he volunteered.A number of interviews,medical examinations were held.Finally Ganesan was selected.

                  Now let us go with KO.MA.Kothandam............

                எளிய கிராம விவசாய
               இனிய குடும்பத்துதித்தவராம்
                தெளிவாய்  எதையும் சிந்தித்தே
              தீர்வே காண்பதில் வல்லவராம்
               அறிவியல்,இலக்கியம்,வரலாறு
              ஆய்வுதான் பலப்பல படித்தவராம்
              செறிவுடன் ஆற்றலுடன் சேர்ந்தே
             சீரிய நெறியில் நடப்பவராம்
               அன்புடைப் பேருளம் மிக்க துணிவு
              யார்க்கும் உதவும் கலையார்வம்
            பண்பு ஆற்றல் சத்தியநெறி
               பார்ப்பவர் கர்னல் நம் கணேசன்  

              படித்து முடித்ததும் பொதுத்துறையில்
             பணிதனை சேவையாய் செய்திட்டார்.
              துடிப்பாய் இந்தியப் படைதனிலே
            தூய நல்லதிகாரியாய் சேர்ந்தார்.




            எதற்கும் யார்க்கும் அஞ்சா நெஞ்சம்
              எடுத்த பணியில் செய்நேர்த்தி
          இதனால் இவற்கே ஆதரவும்
               எதிர்ப்பும் இயல்பாய் எழுந்ததுவாம்

             இரண்டு இந்திய போர்களிலே
             ஏற்புடன் தன்  திறன் காட்டியுமே
            புரட்சி சாதனை செய்தவராம்
            பூம்பொழில் பதக்கம் வென்றவராம்




            தவறது கண்ட  இடத்தினிலே
             தலைமையாயினும் துணிவுடனே
            விவரமாய்யதை எடுத்தோதி
              மிடுக்குடன் செயல்கள் செய்பவராம்
           கர்னல் கணேசன் பணிகளிலே
              கணக்கிலா சாதனை செய்தவராம்
               கர்னலின் திறமையைக் கண்டதுமே
               கைப்பிடித்தரசு உயர்த்தியதாம்

                  அண்டார்க்டிகாவின் ஐந்தாவதாம் 
                  குளிர்காலக் குழுவின் தலைமைதனை 
              கண்டதும் கர்னல்  கணேசனாருக்கே 
              கனிவுடன் அரசே தந்ததுவாம்.  

                  உரிய அறிய   திறமைகளை
                  உணர்ந்தே  யளித்த நம் அரசை
                  பரிவுடன் ஓர் குரலாய்க்கூடி
                  பாராட்டுகளால் வாழ்த்திடுவோம்.

              Secretary,Department of ocean Development ,Govt of India,Dr,S Z .Quasim.with Colonel Ganesan just before Departure to Antarctica.

                                                        To be contd..........

                   
                       
























   
                               ven panip parappilum sila viyarvaiththulikal.

                                                  Colonel Ganesan's Antarctic experiences.



           Wintering at Antarctica is an unique experience for a person.But the impact of that depends upon the inbuilt texture of that person. Ganesan had  natural inclination to be adventurist,sportsman,philosophere,psychologist, spiritual leader and a Rationalist. This type of combination does not happen usually.



Life is the sum total of experience gained by an individual from birth to death.Accordingly man comes in contact with the world of object and ekes out himself for pleasure or pain ,joy or sorrow and failure or success.His reactions are dependent upon the quality and texture of his mind and intellect equipment.There is an infinite variety in the texture and composition of equipment varying from individual to individual.Thus the world provides different and distinct visions according to the equipment of the individual who projects them.



                            So Ganesan's wintering experience was totally different from other wintering members.The additional advantage was that he was the leader and station commander of Indian Antarctic research station.These factors placed him in a position to do things for the benifit of the country and that of posterity with out carring for his superiors when ever they go wrong.
              The book of Antarctic experience written in tamil drew the greatest admiration of Dr.Avvoi Natarajan Retd Vice chancellor of Tamil university ,Thanjavur.On publication and priced Rs 150/per copy 7500 copies were ordered as a single purchase and perhaps entire Tamilnadu Govt Libraries has got a copy.
                    This copy has reached  famous phlantherepist and bussinessman Nalli Kuppusamy chettiar.After going through it perhaps he thought it was worth mentioning amongst the best books he had read. But it is a pity that Sri Kuppusamy chettiar did not bother to find out about the author .

                       Under the above circumstances one day there was a call from Rajapalayam from Kurinji chelvar Dr.Ko.Ma. kothandam.He had gone through Nalli Kuppusamy chettiar's book  where he had written about my Antarctic experiences.He requested me to send a copy of my Antarctic experience book.After going through the book he  wrote a poetry in tamil.This is  for the readers who can understand Tamil.

              பூமி உருண்டையின் தென்கோடி 
             பூரண அழகுடை பனி ப்பரப்பு.
             ஆமிதன்  பெயரே அண்டார்க்டிகா .
             அகிலம் வியக்கும் அவ்விடமே 
             எங்கு பார்க்கிலும் பனிப்பரப்பே 
             என்றுமெப்போதும் உறைபனியே 
             அங்கிலை  புல் ,பூண்டு உயிரினங்கள் 
             அதிகக்   குளிரே  அப்பப்பா  
              நடுங்க வைக்கும் பெருங்குளிரே 
                நாடியை மாற்றிடும் குளிர் காற்றே. 
                அடுக்கடுக்காணப் பனிப்பொழிவே 
              அதுவே பனியின் பாலைவனம்.

                உயினம் வாழ்ந்திட இயலாதாம் 
                ஓய்வெடுத்திடவும் முடியாதாம்.
                வெய்யிலும் அதிகம் கிடையாது 
                 வெக்கை வியர்வை தெரியாது.
                ஆறு மாதம் ஒரே பகலாம் 
               அடடா என்னே ஒளிவெள்ளம் 
               ஆறுமாதம் ஒரே இரவாம் 
                அடடா என்னே கருமை இருள்.

                 மார்கழி மாத குளிர்தானே 
                மனிதரை ஆட்டிப் படைத்திடுதே 
               பாரதின் தென் துருவக்  குளிரே 
               படிக்கையில்கூட உடல் நடுங்கும் .

              புவியியல் வானியல் காற்றியலை 
              புத்தம் புதிதாய் ஆய்ந்திடவே
             புவிப்பல நாடுகள் அங்கு வந்தே
             பொறுப்புடன் தங்கி ஆய்ந்திடுவார்

              இந்த உலகில் உயர்நாடு
               இந்தியாவும் அவ்விடத்தில்
              சொந்த ஆய்வரங்கு அமைத்துள்ளதாம்
              தூய தக்ஷிண்கங்கோத்ரி .

             அவ்வப்போது பலநாட்டினரும்
              ஆய்வுக்கங்கே சென்றுதங்கி
             வெவேறு விதத்தில் பலமாதம்
             விரும்பி சிரமப்பட்டு வருமாம்.
              பனி யில் குளிரில் பல மாதம்
              படுக்கை உணவு உடையோடு
            துணிவாய்த் துன்பமதையேற்றே
            சொல்லொனாத் துன்பம் அடைந்திடுமாம்.

           ஐயோ அக்கொடியக் குளிரை
           அரசும் மறைத்தே ஆய்வோரிடம்
             பைவ்ஸ்டார் ஹோட்டல் போலிருக்கும்
            என்றே சொல்லி அனுப்பிடுமாம்.

                              கர்னல் கணேசனின் வருகை .........
                                                                      
  














செவ்வாய், 7 ஏப்ரல், 2020

                                                              மண் மேடுகள்.

  1965 August 28 சமயத்தில்  இந்திய பாகிஸ்தானிய போர்க்கால சூழ்நிலையில் Army Head quarters Reserve  6 Mountain டிவிசன் என்ற எங்களது படைப்பிரிவு அம்பாலாவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சிவில் ,மிலிட்டரி வண்டிகளில்  உத்திரவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
                  அப்பொழுது வந்த சைனிக் சமாச்சார் பத்திரிகையில் ஒரு பகுதி " The innocent girl became a widow before she could become a woman. " என்று ஒரு இராணுவ நிகழ்வு பற்றி வந்தது படித்தேன்.
              01 September 1965 போர் ஆரம்பமாகிவிட்டது.44 Field Park company என்ற எனது படைப்பிரிவு எங்கெங்கோ சுற்றியது.நான் பாகிஸ்தானின் விமானத்தாக்குதலில் சிக்கி காலில் குண்டடிபட்டு பதான்கோட், டெல்லி ,லக்னோவ் ,சென்னை போன்ற மருத்துவ மனைகளில்
சிகிச்சை பெற்று மீண்டும் எனது படைப்பிரிவு சேர்கையில் போர் முடிந்து எனது படைப்பிரிவினர் மாபெரும் வெற்றி பெற்று பாகிஸ்தானின் "சியால்கோட் "என்ற நகரத்திற்கருகிலிருந்தார்கள்.











                  போரின் தாக்கம் என்னுள் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.அப்பொழுது சில உண்மை,சில கற்பனை என்ற நினைவுகள் கொண்டு உருவாக்கியது "மண் மேடுகள் "என்ற எனது நூல்.இன்றுவரை பதிப்பகத்தாரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.இந்த நூலின் விமரிசனம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் "க.அன்பழகன் "
அவர்கள் எழுதியது.
             இதோ ! உங்களுக்காக ! !
                                       தேசப்போராளியின்  உள்ளக்கோயில் ......
கற்றது கைம்மண்ணளவு,கல்லாதது உலகளவு என்று ஒளவை சொன்னாள்.ஒரு மனிதன் தன் மரணத்தின் கடைசி நிமிடம் வரை கற்றுக்கொண்டுதான் முடியவேண்டும். உலகின்
ஒவ்வொருகணமும்,விந்தைகளும்,வியப்புகளும்,ப்ரம்மாண்டங்களும்,பேரச்சங்களும்,பெரு நிகழ்வுகளும் என நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.உலகின் மனிதனாகப் பிறப்பு எடுத்துவிட்டவர்களில் ஒரு சிலரே இறப்பதற்குள் எதையேனும் இந்த தேசத்திற்கு பங்களிப்பாகச்செய்துவிட்டு அது தேசத்தின் விழுமிய அடையாளமாக அதை உருவாக்கியவன் என்கிற தன்னையும் நினைவுகூர்தல் வேண்டும் என்று நினைத்து உழைப்பார்கள்.
இல்லை.அர்பணிப்பார்கள்.
               தேசத்தின் நலனுக்காக அதன் ஒவ்வொரு அசைவிலும் அதனைப் பாதுகாப்பாகக் காத்து நிற்கிற மனிதர் கர்னல் கணேசன்.அவரைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.ஆனால் அவர் எழுதிய இந்த புத்தகம் அந்த மனிதனின் உயரிய சிந்தனைகளையும் தேசத்திற்கான தொண்டுகளையும் அதற்கான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இன்றுவரை இயங்கும் தன்னலமற்ற சேவைகளின் ஒளிர்வையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருகிறது .
                இந்த நூல் அவரின் இராணுவ தளத்தில் பணியாற்றிய அனுபவத்தை மட்டுமே உணர்த்த வந்ததல்ல.தன்னை ஈன்றெடுத்த தேசத்திற்காக யாரும் ஆணையிடாமல் அச்சுறுத்தாமல் அதிகாரம் செலுத்தாமல் தன்னுடைய செங்குருதியிலேயே உணர்வாக ஊறித் திளைத்துச் செயல்பட வைக்கவேண்டும் என்கிற சத்திய முகங்களைக் காட்சிப்படுத்துகிற நூலாகும்.


                    ராணுவத்தில் சேர்வது  என்பது பிழைப்புக்காக என்பது ஒருபுறமிருக்க அப்படி வாழ்க்கை துரத்தச்சென்று சேர்ந்தவரல்ல கர்னல் கணேசன்.பொதுப்பணித்துறையில் உயர் பதவியில் திறம்படச் செயலாற்றிய பொறியாளர்.நாட்டிற்கு கேடு வந்திருக்கிறது .கேடு  நீக்க வாருங்கள் என்றவுடன் அரசு  பணியை அப்படியே விட்டு விட்டு தேசம் காக்க ஓடிய மாண்பாளர் கர்னல் கணேசன்.


                  இது எல்லோருக்கும் அமையுமா? அமையாது.இப்படியொரு மனப்பாங்கு பிறந்தது முதல் குருதியிலேயே கலந்து இருக்கவேண்டும்.அதுதான் கொப்பளித்து ஓட வைத்திருக்கிறது.
                     இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் அனுபவம் கலந்த பொறுப்புணர்ச்சியும் நாட்டுப்பற்றும் உழைக்கும் துடிப்பும் என ஒவ்வொரு சொல்லிலும் கலந்து எழுதப்பட்டமையைப் படிக்குபோது உள்ளத்தில் ஆணியெழுத்தாய்ப்  பதியவைக்கிறது.
                                 "உடலாலும்,மனதாலும்,நினைவாலும்,நோக்காலும்,சொல்லாலும்,
செயலாலும் சீருடையணிந்த வாழ்க்கையை நேசித்தவர்.ஆனால்
 இந்த வாழ்க்கையின் அற்புதங்களையும்,அவலங்களையும் வாழ்ந்து பார்த்துதான் புரிந்துகொள்ளவேண்டும்."
              கர்னல் கணேசனின் சொற்கள் இவை.இப்படித்தான் 30 ஆண்டுகள் அவர் பணிபுரிந்திருக்கிறார்.அது இந்த நூல் முழுக்க விரவிக்கிடக்கிறது.சத்தியத்தின் அடையாளங்களாக அவை இந்நூலில் உயிர்த்துக்கிடக்கின்றன.
                  அரவிந்தன்,தேவகி,அரவிந்தனை நேசமும் பாசமும் கொண்டு அர்ச்சிக்கும் ஒரு பெண் பரிமளா.(அவள்தான் இந்நூலின் கதை சொல்லி ) எனக் குறுகிய சட்டகத்திற்குள் இப்படைப்பு உருக்கொண்டிருக்கிறது.எங்கும் தடையில்லை,தளர் வில்லை.உண்மையின் சொரூபங்களைச் சிலை வடிப்பதுபோல வடித்துக்கொண்டே போகிறது ,இரு கரைகளுக்குள் கரைமேவா கரைதொட்டோடும் அழகிய நதியின் சீரான வேகத்தைப்போல.நம்மிடம் பல இடங்களில் பேசுகிறது,நம்மை உறைய வைக்கிறது,உணர்வில்  நெருப்பேற்றுகிறது,உடலெங்கும் வெப்பப்பரவலைச்  சீராக ஏற்றி நகராது கட்டிப்போடுகிறது.




               பறவை அடைகாக்கும் முட்டையை உடைப்பது போன்ற பாவம் ஒரு நூலின் எல்லாவற்றையும் சொல்லிவிடுவது என்பது.ஆகவே ஒவ்வொருவரும் இந்த நூலை வாசிக்கவேண்டும்.அப்போதுதான் கர்னல் கணேசன் வாழ்ந்த வாழ்க்கையின் சத்திய தரிசனம் புரியும்.கண்ணுக்கு விருந்தாகிக் களிக்க வைக்கும்.கனலை மனத்தில் சுடரென ஏற்றியும் வைக்கும்.
                  முதல்தரமான வீரன் தன்மானம்,நாட்டுப்பற்று,தனது படைப்பெருமை,இராணுவ சம்பிரதாயம் போன்ற உணர்ச்சிகளினால் உந்தப்பட்டு தனது உயிர் ,தனது குடும்பம் உறவு என்பன போன்ற தடைகளினால் தடுக்கப்படாமல் யாருடைய உத்திரவையோ ,கண்காணிப்பையோ எதிர்பார்க்காமல் தன்னால் எதிரியின் படைகளை ஒரு சில வினாடிகளாவது தடுத்து நிறுத்த முடியும் என்று முடிவு செய்து அந்த முடிவே மன  உறுதியைத்தரப் போராடிப் பின்னர் அறிமுகமில்லாமலேயே அடக்கம் செய்யக்கூட ஆள் இல்லாமல் மண்ணோடு மண்ணாகிக் கலந்துபடுகிறான்.இப்படி அறிமுகமில்லாமலேயே மண்ணில் கலந்துபடும் இம் மண்மேடுகளே முதல்தர தேசீய வீரர்கள் என்று கருதப்பட்டு அவர்களுக்காகவே எழுப்பப்பட்டதே unknown soldiers சமாதி. 








               படிக்கிறபோதே  இரத்தம் துடிக்கிறது.உணர்வில் எதையோ திணித்து எரிய வைக்கிறது.ஒரு தேசப்  போராளியின் தன்னுடைய தாய் நாட்டைக்  காக்கத்துடிக்கும் மனத்தைக் காட்சிப் படுத்துகிறது.
            கர்னல் கணேசன் இராணுவப் பணியிலிருக்கும்போது செய்த பல செயற்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.குறிப்பாக வீட்டினர்க்குக் கடிதம் எழுதுதல் என்கிற செயற்பாடு போர் முனையிலிருந்தும் அவரவர் குடும்பம் சிதையாமலிருக்க உதவும் பங்கு இவற்றை உருவாக்கிய சூழல் கர்னல் கணேசனின் இன்னொரு கருணை உள்ளத்தை,செயல் திறத்தை அடையாளப்படுத்துகிறது.
                     தன்னுடைய அனுபவங்களின் கடையாக விரித்திருக்கும் இந்த நூலில் பல உணர்வு தெறிக்கும் கேள்விகளையும் எழுப்புகிறார்.
                      எந்த மக்கள் பிரதிநிதியாவது ஒரு இராணுவ வீரனின் சமாதியைப் புனரமைக்க முயற்சித்திருக்கிறார்களா ?
               வெகு நியாயமான இன்றுவரை பதில் சொல்ல முடியாத கேள்வியாக நின்று வாசிப்போரை உறுத்தல் கொள்ள வைக்கிறது.குற்ற உணர்ச்சி நெருப்பில் நம்மைத் தள்ளுகிறது.
               இராணுவ சிப்பாயைவிட அவனது மனைவியே வாழ்க்கையில் மிகவும் போராடுகிறாள். 
                     மனது கசிகிறது.இச் சொற்களில் தேசம்,தேசப்பற்று,பாதுகாப்பு இவற்றிற்காகத் தங்களைத் தியாகம் செய்யும் எந்த ஒரு வீரனும் தன்னுடைய அவலங்களைப்பற்றிக் கவலை கொள்வதில்லை.இந்த நிலையில் அவர்களைப்பற்றி இந்த தேசம் கவலை கொள்ள வேண்டாமா? என்பதையும் பூடகமாக உணர்த்துகிறார்.தேசத்தைக் காப்பவனின் வலியையும் காயங்களையும் உணர்வுகளையும் இந்த நூலில் எடுத்து உடைக்கிறார். அவற்றின் சில்லுகள் படிப்போரின் உள்ளத்தில் விழுந்து வடுக்களை ஏற்படுத்துகின்றன;வலிக்கிறது.




  
               நூல் முழுக்கப் பல்வகை சிந்தனைகளை  எழுப்பும் கேள்விகளும் நிகழ்வுகளும் சங்கடங்களும் இன்னல்களும் நிரம்பி வழிகின்றன.
அவற்றுக்கிடையில் ஒரு தேசப்  போராளியின் வாழ்க்கை அழகிய தேராக வடம் பிடித்துக் காட்டுகிறார் கர்னல் கணேசன்.குறிப்பிட்ட காலங்கள் பணியாற்றிய பிறகு கட்டாய ஒய்வு கொடுத்துவிட்டு வந்து தன்னுடைய சொந்த ஊரில் சில செயற்பாடுகளை மேற்கொள்ளுவதாக இந்த நூல் முடிகிறது.என்றாலும் அந்த முடிவில்லா செயற்பாடுகளில் இந்த தேசத்தின் விடியலுக்கான பல வித்துக்களை நமக்குத் புடம் போட்டுத் தருகிறார் கர்னல் கணேசன்.
            நம்மிடத்தில் ஆயிரம் இருக்கலாம்;
            ஆயிரம் லட்சங்களாகப் பெருகலாம்;
            பெருகியவை பெருங்கடல்களாகலாம்;
            ஆனாலும் அவை பயனற்றவை.
              எப்படி இருக்கவேண்டும் எப்படி பெருகவேண்டும்
            என்பதற்கு அடையாளம் வேண்டும்.
           அவை சத்தியத்தேடல் களினால்தான் அடைய முடியும்.
இதற்க்கான வழிகாட்டுதல்களைத்தான் கர்னல் கணேசன் இந்த நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
                அவசியம் வாசிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல,வாசிக்கும் எல்லோரும் சுவாசிக்கவேண்டிய நூலும் கூட.
            என் மனக் கிடக்கையில்இந்நூல் ஏற்படுத்திய விளைவுகளை என்றேனும் என்னுடல் விட்டு உயிர் பிரிவதற்குள் ஒன்றேனும் செய்வேன் என்கிற  ஒற்றைச்சுடரை ஏற்றிவைத்திருக்க இந்நூல் உதவியிருக்கிறது.
                                                                     முனைவர்.க.அன்பழகன்.
                                                                          தமிழ்ப் பேராசிரியர் 
                                                                அண்ணாமலை பல்கலைக்   கழகம் 
                                                                             சிதம்பரம்.

























செவ்வாய், 31 மார்ச், 2020

                            Knowledge and wisdom

             Knowledge is possessing a mental understanding of certain information. Wisdom is the practical ability to use your knowledge to make good decisions consistently throughout your life. One common illustration of the difference goes something like this: knowledge is understanding that a tomato is botanically a fruit.

                         The wintering at Antarctica was something which we are experiencing now in India "The lock out "situation.But we enjoyed that period as we improved in many aspect of Camaraderie and also our personal traits.



                   My interest was in spiritual matters.So I stared in looking for such books in our library.As far as Hindu Philosophy is concerned Aadhi Sankara was an authority.So I started reading his life and achievements.



                           Sankara goes to Prayaga to meet Bhattapada and debate with him.But Bhattapada was about to enter into fire for his personal reasons and hence directed Sankara to go to Mahishmati and debate with Mandanamishra.

                 The atmosphere of Mahishmati seemed impregnated with high philosophy and vibrated with the great scholar Mandana mishra .

                   However after some initial disturbance,the debate was to start next day with  Ubhayabharathi,wife of Mandanamishra as judge.Ubhayabharati,was the very incarnation of Saraswati,,the goddess of learning.

              The debate started with Sankara putting forward his point of view.Here is the time for learner like Col.Ganesan,to observe the way the debate goes and  the subject matter that is being debated.The subject and the method of presentation by the contestants kindled the inner spirit in Ganesan and he just could not believe that he was reading a book.






The atmosphere outside was minous 30-40 degree celcious and he was visualising the cotestants sitting infront of him.Sankara putting forward his point of view with clarity and conviction.On the contrary Mandanamishra getting quotes from vedas did not yield to Sankaras point of view.The arguements became keener and more complex,and the refutations and denials also became correspondingly stronger and bolder.Both the contestants raised more and more intricate questions.
              The judge ,Ubhayabharathi saw no sign of the debate nearing its end,for each argument only opened up new areas of contention ,more abstruse and abstract. 

                     As time is nearing for lunch ,the readers to understand the duties of a devoted wife. Ubhayabharathi gave two garlands to the contestants to wear and continue the debate.Here Ubhayabharathi demonstrates to the readers that in hindu philosophy husband is the god for the married women.If God ,the absolute can be worshipped in an image,much more can he be so worshipped in a man.It is the Bhava or the attitude that is of importance.To hold that man is the greatest image of God and the husband the highest Guru,is a highly efficacious  attitude in disciplining the soul.The service to husband ,with the knowledge that he is God in person,is one of the finest gifts to the world civilization by indian culture ,placing the wife on the pedestal of unshakable glory.


                    As the arguments continue ,Ubhayabharathi observed that the garland on her husband started withering .On the 18 th day,setting aside with a stern mind  all claims of sentiment she stood on the needle point of honesty and in concluding the debate ,publicly announced,"My husband has lost the debate".Ubhayabharathi's moral courage was of  unequalled  excellence and all were thrilled by her utter impartiality and unqualified objectivity.

                But she told Sankara "Sirs,my husband's defeat is not yet complete, as wife is half of man's soul,you have to defeat me also.

                       Sankara politely declined saying, "Mother,scholars of standing never desire to debate with the ladies."
           Udhayabharathi replied rather sharply,"why do you entertain a blittling attitude towards women.? you know that the great sage Yagyavalkya did engage in debate with Gargi.The royal sage Janaka also entered into debate with a women jnani named "Sulabha " Why should you not with me therefore ,when I solicit you to the debate.?If you do not agree to a debate ,then you must accept your defeat.




                  At this stage Ganesan was interested to the details of this debates which Udhayabharathi mentioned.He went out of the station "Dakshin gangotri "', and looked around the icy continent Antarctica.What a great country "India " and what a sensational spiritual history  we have .After few minutes of inhaling fresh air Ganesan came inside the station and continued the reading.




                   Sankara saw that there was no escaping from this gentle but firm lady .Her proud words could not easily be sprung away.In the interest of his mission,though not for personal glory ,he felt compelled to agree to a debate with the arbiter who had acted as a judge so impartially.No time was lost and the debate between the homeless wanderer and a home keeping house wife began in full swing. Ubhayabharathi identified herself with her husband's philosophy and argued hotly.Gradually the debate entered the subtle and complex fields.Her modes of debating,the magnitude of her scholarship ,her powers of analysis,her deep grasping power and remarkable self confidence filled Sankara with amazement.Finding her an adversary,with talent as brilliant as his own ,Acharya proceeded cautiously on.

                 To the hundreds of questions that Ubhayabharathy raised on all aspects of philosophy,Sankara gave highly original and convincing answers.This again went on for seventeen days.The audience began to think that the debate would never come to an end.It was not long before Ubhayabharathi understood quite well that she could never score a victory over the monk in the field of Veda or its allies.

                 On the 18 th day ,she sprang a surprise  on Sankara in the course of debate.Her first question on that day was '"what are the signs and qualities of amatory passion ? How many types are there in the erotic ?In what parts of the body has erotic passion its centers.?By what physical act does it find expression and by what acts does it subside.?How does passion rise and fall in man's and woman's body in the bright fortnight when the moon waxes and the dark fortnight when it wanes ? 

                        Sankara listened to all these questions and sat still with downcast eyes for long.Then he said,"Mother,please question me in the scriptures.And I shall answer you.How is that you put such type of questions to a celibate ascetic ?




                        At this stage Ganesan thought for awhile.He is married for about 14 years and they have two children.But He does not know answer to even one question. A  45 years old military officer thought for the first time that sex in human being has got no difference from animals or for that matter all living beings.Subsquently he had learnt that there is no diffence between God worship  and intercourse.Sex in human being is a divine act and far far away from  just discharging passion.

                 Ubhayabharathi quickly re acted,"Why greatest of the monks ,is not Kamakala,the science of erotics also a science proper.? You are a monk and may say that you have renounced everything ,but you have not yet renounced the desire to score victories in philosophical debates.One who knows the import of vedas is really omniscient.If you are ,as you pose to be ,a perfect monk,you must really be a master of the senses,a conqueror of the passions of which the senses are of media of expression.Why then should a mere objective discussion on the subject of kamakala cause a ruffle in your mind ?

                          Ganesan generally does not read for pleasure sake.Every activity,has to send a message to the viewers for improvement.There is no casualness in his life .So the discussion between Sankara and Ubhayabharathi had deeply imbibed a message in his mind.

              On hearing Ubhayabharathi's thundering views,Sankara was bewildered and remind silent.Mother Saradha was making her divinity evident.Now this was all her wonderful play,play of Parashakthi ,without whom even the Siva,Vishnu and others lose their very existence and meaning.Glory to Saradha,Shri Rajarajeswari ! 
                 
                            Mandana was disturbed on the developments and asked ubhayabharathi,"My dear ,do you think that these questions are worthy ones.?Do not insult the asceticmonk in this fashion. 

                  Ubhayabharathi was, however,much more than a match even for the two gifted men.Without any relenting ,she re asserted her view,"As a result of knowledge comes the utter conquest of the passions like lust and anger.If a mere discussion of kamakala is going to cause a undulation to his mind,he is not then evidently established in the knowledge of reality and is obviously unworthy to be my husband's Guru.

                  Sankara got over the feeling of surprise at these inconvenient questions and got ready to meet the challenging situation.With no anger or bitterness, but instead with a smiling countenance he said "Mother ,I need a months time to give replies to your questions.Pray,grant me this time.I am a celibate, monk. I shall not answer your questions by any word from my mouth.The primary injunction of the scriptures for a monk is total renunciation of lust and of all lustful inclinations and preoccupations. I am not bound by the desire to score victories in debate as you incorrectly pointed out.i am just carrying on my mission of lokasangraha , of which this merely becomes a portion.Even a man of supreme wisdom who is firmly  established in the state of sameness which is beyond the three gunas has,for the sake of the welfare and guidance of the people of the world,to respect the injunctions of the scriptures in the field of physical conduct.So if I choose to reply to your questions by a word of mouth ,I shall be tarnishing the ideal of monasticism.There fore I shall enter another physical frame and the shall answer your questions by writing a book for the purpose.Do you agree to this arrangement ?

                   Here Sakara's stand was like that of woman saint Mahadevi,who has renounced everything including her clothes.

                   Ubhayabharathi said, "well,Prince of monks,even if you enter another body and then do the answering of my questions,you will still be subjecting yourself to the sway of lustful thought,will that not involve a scaling down from the ideals of monasticism.?

           Sankara answered quietly, "Mother,this utterance surely does not become of you .If one who was a chandala in a previous birth is now born in a brahmin family, ,does this brahmin hood suffer any diminution because of his past./ 

                  With this Sankara moves out and with his yogic power enter the body of Raja Amaruka ,who had jut died. After a months time sankara comes back and wins the debate.

                              Ganesan on retun from Antarctica. 
                  
                After reading such scriptures Ganesan  was very clear in his mind about his mission in this birth.when he returned from Antarctica not only he was well educated his body and mind had a beaming power. 

              Just after return from Antarctica Ganesan organises President's Colour Presentation Parade at M E G & Centre and was Dy Parade commander.





































ஞாயிறு, 29 மார்ச், 2020

                       Auto suggestions  & Self motivation
           
                  "An idle mind is a devil's workshop" is quote to warn all those who are idling and wasting their life .I wrote in my blog dated 01 Sep 2017 titled as "Thoughts are dynamic and vital " about how we had spent about 480 days at the icy Continent Antarctica




                         Every member of the 15 member wintering time had specific task to perform,including the Leader.The team leader Col.Ganesan was selected as a Civil Engineer,over & above his role of command and control of the team.He was to be assisted by one Electrician and one carpenter. The team  in a nutshell was an excellent selection and every one was a best one in his trade.So Col Ganesan did not have much role to play as an Engineer.But he did not idle away his time.


              He was already on his way to "Vanapprastham".Just to give an out line of Hidu Philosophy,human being life is of four stages.
                     Brahmacharyam
                      Grahastham
                      Vanapprastham
                     Sanyaasam.
         Each one is to be  practiced for about 25 years and that is how we are expected to live for 100 years.This Time schedule is modified according to the "Karma "of the individuals.For Ganesan ,the first phase of "Brahmacharyam " went upto 32 years,and was on "Grahastham "when the Antarctic tenure cut short of that phase and sent him to next phase "Vanapprastham " when he was 45 years old.
So by force he was to practice Vanapprastham and the icy continent was the ideal place of isolation.
                   He started studying in greater detail about this phase and  every Saturday on weekly pooja time,used to brief the members about "Philosophy of Life "  (No alternative ! ! ! My team members may forgive me.)
             Some of the quotes are for you.



     1.         Motivation,persistence,and perseverance are the distinct    traits of determined,dedicated individuals who can make              things happen.
      2.       A harmonious association of powers ,simultaneous and quick concentration of all senses leads to success unknown to history.One plus one does not always equals two.Sometime the combination of two independent substances result in an alley with qualities far superior to the sum of original ingredients.Look around at all times "the one plus one not equal to two "theory in your world.
  3.    Your thoughts create chemical changes in your body.Creative thoughts give you strength and destructive thoughts reduce your strength.
   4.        Many great medical experts are of the opinion that "we will by conscious command evolve cerebral centers which will permit us to use powers that we are now not even capable of imagining.   

    5.          Achievement is the inevitable and natural by-product of awareness.
    6.      Practice and imagination are the two keys for successful life .Slowly and steadily through practice you set up communication links with unconscious to tap the reserves of the mind.Gradually conscious control of so called involuntary functions develops. By practice relaxations of stress becomes automatic.Once the body is under autogenic control 
Autogenic training is a desensitization-relaxation technique developed by the German psychiatrist Johannes Heinrich Schultz by which a psychophysiologically determined relaxation response is obtained.) 
affirmation for better performance is just a follow through.




                Most eastern  philosophers hold that we live in a bright vital sea of energy -yogis call this "PRANA".Oriental acupuncture recognizes this same energy calls it "CHI ."This energy is in the atmosphere and also circulates along specific path ways in the body according to Chinese. Just as we transform the food we eat to our own use ,so do we transform "PRANA "to maintain and develop ourselves.Regulated breathing enables us to extract a greater supply of PRANA from the air.The body accumulates  PRANA as a battery does electricity..This energy Yogis say,gives the body vitality and nourishes  consciousness .PRANA  absorbed by the brain is responsible for unfolding mental abilities and physical powers.Like oxygen ,PRANA is said to keep us going whether or not we are aware of it.
           Each one of us are born with a purpose .Identifying ,acknowledging and honoring this purpose is the most important thing.Do not limit your wishes based on the available facts.Aim high so that all your brain cells will work towards achieving the high aim.
            Brain researchers estimate that your unconscious data base out weighs the conscious on an order exceeding ten million to one.This data base is the source of your hidden,natural genius.In other words a part you is much smarter than you are.The wise people regularly consult that smart part .You may call it consciousness,intuition ,luck or anything.Remember that intellect has little to do on the road to discovery.
           
                These type of studies gave strength to Ganesan and carry on with the work.As time passed the polar night (six months no sun light ) started.Out team had organised varieties of games and entertainment which was beyond the imagination.

                              No doubt that our wintering was the most successful period in my life.I am sure that my team members where ever they are will countersign my statement.
























      



















புதன், 11 டிசம்பர், 2019

                               உத் திரவிடுவதா ! 
                                    வேண்டுகோள் விடுப்பதா ?

                 1989 March 26  கர்னல் கணேசன் ஒன்றரை ஆண்டுகால உறைபனி வாழ்க்கைக்கு பிறகு தாயகம் திரும்பினார்.உடனடியாக அவருக்கு பணியிடமாற்றம் தராமல் பதினைந்து நாட்கள் விடுமுறையும் பின்னர் இராணுவத் தலைமையகம் வரவும் உத்திர விடப்பட்டிருந்தது.
               
                 சிறிதுகால இழுபறி நிலைக்குப்பின் அவர் பெங்களூரு பயிற்சி மையத்தில் பயிற்சி  படைப்பிரிவு தலைவராக இட மாற்றம் பெற்றார்.01 Sep 1989 கணேசன் மெட்றாஸ் என்ஜினீயர் குரூப் என்ற பயிற்சி தளத்தில் படைப்பிரிவு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.



                     அதிகாரிகளுக்கான வண்டிகள் தனியாக பராமரிக்கப்பட்டு தேவைக்கேற்ப அனுப்பப்பட்டன.வண்டிகள் மாறினாலும் டிரைவர்கள் மாறுவதில்லை.ஆனால் கணேசனுக்கு மட்டும் தினம் ஒரு வண்டியாகவும் வேறு வேறு டிரைவர்களாகவும் வந்துகொண்டிருந்தார்கள்.இது சில நிர்வாகப் பிரச்சினையை ஏற்படுத்தியது.நாளைக்கு இத்தனை மணிக்கு வரவேண்டும் என்று சொல்லியனுப்பினால் மறுநாள் வேறு டிரைவர் தாமதமாக வந்து தனக்குத் தெரியாது என்பார்.




             கணேசன் வண்டிகளை நிர்வகிக்கும் அதிகாரியை சந்தித்து ஏன் நிரந்தரமான டிரைவரை அனுப்பவில்லை என்று காரணம் கேட்டார். அதற்கு அவர் கர்னல் கணேசனிடம் பணியாற்ற டிரைவர்கள் பயப்படுவதாகவும் இன்னும் சில நாட்களுக்குள் ஒரு டிரைவரை ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார்.
            இராணுவ தளத்தில்  கட்டளை இடப்படுகின்றனவா அல்லது வேண்டுகோள் விடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் கணேசனுக்கு ஏற்பட்டது.
                சுயநலமற்ற தனது எண்ணத்தின் நேர்மையிலும் தனிமனிதனாகத் தனது செயாக்கத் திறமையிலும் சிறப்பான ஒரு அதிகாரி தனது சொல்லிலும் செயலிலும் ஒரு கண்டிப்பு தன்மையைக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பவர் கணேசன்.தனது தலைமையின் கீழ் பணியாற்றுபவர்களை அப்படித்தான் அவர் உருவாக்குவார்.


               இராணுவப் பணிகளில் வேண்டுகோள் விடுப்பதற்கு எப்பொழுது அவசியமாகிறது.சட்டத்திற்குப் புறம்பாக ,நேர்மையற்ற வழிகளில் செல்லும்போது,தன்னால் முடியாது என்ற நிலை வரும்போது  தனது பணியாளர்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன.கடமையை செய்ய வேண்டுகோள் விடுப்பதில்லை;கட்டளை இடப்படுகின்றன.
                 அந்த அதிகாரி இந்த டிரைவர் இந்த இடத்தில் வேலை என்று கட்டளை இட ஏன்  தயங்குகிறார் என்று புரியாமலேயே கணேசன் திரும்பிவிட்டார்.சில நாட்களில் ஒரு டிரைவர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இனிமேல் தினமும் அவர்தான் வருவார் என்கிறார்.
               என்னப்பா ? என்னிடம் பணியாற்ற டிரைவர் எல்லாம் பயப்படுவதாக சொன்னார்களே ! நீ எப்படி சம்மதித்தாய் ? என்கிறார்.தவறு செய்யாமல் பணியாற்றும் பொது ஏன்  சார் பயப்படவேண்டும் ?எனக்கு 14 வருட சர்விஸ் ஆகிறது.இதுவரை ஒரு தண்டனையும் வாங்கியதில்லை என்று பெருமையோடு பதிலளித்தார்.



               கர்னல் கணேசன் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.சில நாட்களில் கர்னல் அதிகாலை புறப்பட வேண்டியிருந்தது.டிரைவர் எந்த தயக்கமும் இல்லாமல் வந்துவிட்டார்.போகும் வழியில் டிரைவரின்  குடும்பம்,தங்குமிடம் பற்றி விசாரித்தார்.சுமார் ஒரு வருடம்  அரசாங்க வீட்டில் இருந்துவிட்டு இப்பொழுது வாடகை  வீட்டில் சுமார்  10 Km தூரத்திலிருப்பதாகவும் வேலைக்கு வர மோட்டார் சைக்கிள் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
                   பயிற்சிப் படைப்பிரிவு தலைவர்கள் கால நேரம் கடந்து பணியாற்றவேண்டும்.அவர்களது டிரைவர் அரசாங்க குடியிருப்பில் அருகிலிருப்பது அவர்களது பாதுகாப்பிற்கு நல்லது.பணிமுடிந்து வந்த கர்னல் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு டிரைவருக்கு ஒரு அரசாங்க வீடு கொடுக்க உத்தரவிட்டார்.டிரைவர் சந்தோஷமாக தனது குடியிருப்பை மாற்றிக்கொண்டார்.
          ஒருநாள் டிரைவரின்  சீருடைகளைப்பார்த்த கர்னல் அது மிகவும் வெளுத்து இருப்பதைக்கண்டார். ஜவான்களுக்கு சீருடை காலத்தின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு இரண்டு சீருடை என்று வழங்கப்படுகிறது.உபயோகத்தைப்பொறுத்து அவை கலர் வெளுத்துப் போகலாம்.
                 கர்னலின் டிரைவர் சீருடை நன்றாக இருப்பது அவசியம்.கர்னல் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு டிரைவருக்கு ஆறு மாதத்திற்க்கு இரண்டு செட் சீருடை வழங்க உத்தரவிட்டார்.
                       ஒருநாள் அதிகாரிகளுக்கான விருந்து நடக்கவிருந்தது.டிரைவர் வந்து,ஐயா,மாலை எத்தனை மணிக்கு வண்டி வேண்டும் என்று கேட்டார். அதிகாரிகள் விருந்துக்கு தான் தனது காரில் போய்விடுவதாகவும் டிரைவர் தனது சொந்த வேலையைப்பர்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.மலையில் எல்லா அதிகாரிகளும் அரசாங்க வண்டியில் டிரைவர்களுடன் வந்திருந்தார்கள்.விருந்து நடந்து கொண்டிருந்த போது கர்னல் கணேசனின் டிரைவரைத்தவிர மற்ற எல்லோரும் அங்கிருந்தார்கள்.அப்பொழுது ஆரம்பத்தில் கர்னல் கணேசனிடம் பணியாற்ற பயப்பட்டவர்களும் அங்கிருந்தார்கள்.அவர்களிடையே கர் னலின் டிரைவரின்
சுகமான,பாதுகாப்பான ,கடமையுணர்வோடு கூடிய வேலை பற்றி வானலாவப்   புகழ்ந்து கர்னல் கணேசனிடம் பணியாற்றக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்களாம்.


                 இராணுவப்பணியிலும் தனது தனி வாழ்விலும் கர்னல் நல்ல ஒழுங்குமுறைகளைக் கடைபிடிப்பவர்.தவறுகள் திறுத்தப்படவேண்டும்;குற்றங்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோட்பாடு உடையவர்.அவர் பணியாற்றிய இடங்களிலும்.அவரிடம் பணியாற்றியவர்களிடமும் இந்த தாக்கத்தைக் காணலாம்.