ஞாயிறு, 14 ஜூலை, 2019

                             மெய்ப்பொருள் அறிவு.

              மெய்ப்பொருள் அறிவு என்பது ஒருவித மன நிலை.இந்நிலையை அடைந்தவர்கள் பின்னர் அந்நிலை பற்றி முழுவிளக்கமும் தந்தது இல்லை.காரணம் சொற்களால் விளக்க முடியாத நிலை அது.உணர்ந்துதான் பார்க்கவேண்டும்.
          ராமகிருஷ்ண  பரம ஹம்சர் பரவச நிலைக்குப் போகிறார் என்பார்கள்.மற்றவர்களும் அந்நிலைக்குப் போக முயற்சிக்கலாம்.ஆனால் ராமகிருஷ்ணரின் மன  நிலையையும் மற்றவர்களது மன  நிலையும் ஒன்றே என்று சொல்லமுடியுமா ?
                       எண்ணங்களின் வலிமையான தாக்கத்தினால் சூழ்நிலையை மாற்றி அமைக்க முடியும் என்றும் கற்பனையில் காணும் மனிதர்களை நேரில் கொண்டுவந்து நிறுத்த முடியம் என்றும் கர்னல் கணேசன் எழுதியும் பேசியும் வருகிறார்.அதன் வெளிப்பாடாக அவர் பிறந்த ஊரான சன்னாநல்லூரில் அறிவை அறிவால் அறிந்துகொள்ளும் அறிவுத் திருக்கோவில் அமைத்து பொது மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகிறார்.


           மயிலாடுதுறை -திருவாரூர் மெயின் சாலையில் அவரது சொந்த நிலத்தில் அமைந்துள்ள இந்த இடத்தைப்பற்றி யாரிடமும் விளக்கம் கேட்கவேண்டிய அவசியமில்லை.இதைப்பற்றி கேள்விப்பட்டு அதைப்பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிட்டால் கட்டாயம் ஒருநாள் அங்குபோய் நிற்பீர்கள்.
           திருவாரூர் தியகேசப் பெருமானைத் தரிசிக்க ஒருவர் பாண்டிச்சேரியிலிருந்து காரில் புறப்பட்டுப் போகிறார்.வழியில் அகத்தூண்டுதல் பூங்காவைப்பார்த்துவிட்டு  இது என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே போகிறார்.

 
          தியாகேசப் பெருமானை தரிசித்துவிட்டு வரும் வழியில் மீண்டும் சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்காவில் காரை நிறுத்தி சுவர்களில் எழுதியிருக்கும் வாசகங்களை பொறுமையாகப் படிக்கிறார்.பூங்கா பூட்டி யிருக்கிறது .யாருமே எதிர்பார்க்காமல் சற்று நேரத்தில் பூங்கா பாதுகாவலர் அங்கு வருகிறார்.
                 பூங்காவைத்திறந்து அவர்களை வரவேற்று பூங்கா அம்மைப்பின் காரண காரியங்களை விளக்குகிறார்.விண்  ஈர்ப்பு மையம் என்ற நூலக அருங்காட்சியகத்தை திறந்து மேலும் விளக்குகிறார்.
                     தியாகேசனத்தரிசித்து விட்டு வந்த நமது பார்வையாளர் ஒரு புது உலகிற்குள் நுழைந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு பூங்கா அமைப்பாளர் கர்னல் கணேசனுடன் பேச முடியுமா ? என்று கேட்கிறார்.
                 நேரம் பகல் 2 மணி.சென்னையிலிருக்கும் கணேசனைத் தொடர்பு கொள்கிறார்கள்.வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு வித்தியாசமான புதுமையை படைக்கும் மனிதருடன் பேசிய அவர் தனது உணர்வுபூரணமான மகிழ்ச்சியை வார்த்தைகளில் கொட்டுகிறார்.
                அவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா ?


             அவர் ஒரு மக்கள் பிரதிநிதி.அதுவும் பக்கத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்.

                      ஆம் !நண்பர்களே !என்னுடைய பிறந்த மண்ணை உலகின் கீழ்க்கோடியில் தூவி அங்கிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகள் உறைபனி யில் மூழ்கிக் கிடந்த சுமார் ஒரு டன்  எடையுள்ள கற்பாறைகளை பதினைந்தாயிரம் கீ.மீ  மற்றும் ஏழுகடல் தாண்டி  கொண்டுவந்து  உறங்கிக் கிடக்கும் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்ப முயற்சிக்கும் கணேசனை அண்டை மாநில மக்கள் பிரதி நிதி சட்டமன்ற உறுப்பினர் வானளாவாப்  புகழ் கிறார்.
                      எனது தாயகம் 234 சட்டமன்ற உறுப்பினர்களைக்   கொண்ட  தமிழகத்தில் எனது பிறந்த ஊரினைகொண்ட சட்ட மன்ற உறுப்பினர்  மந்திரியாக இருக்கும் இந்த தமிழ்நாட்டில் இந்த சுமார் பத்து ஆண்டுகளில்  தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சாலையில் அமைந்திருக்கும் அகத்தூண்டுதல் பூங்காவைப் பற்றியோ  தன்னலமற்ற தியாக உணர்வுடன் பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி,குடியரசுத்தலைவரின் விருது பெற்ற கர்னல் கணேசனைப் பற்றி தெரிந்துகொள்ளவோ காலமும் நேரமும் இல்லாத நமது மக்கள் பிரதிநிதிகளைப்பற்றி  நாம் என்ன சொல்வது.?

                                        வாழ்க ! தமிழகம் !
            வளர்க்க நமது நாட்டுப்பற்று.


















வியாழன், 11 ஜூலை, 2019

               அறிவு என்ற விளக்கை ஏற்றுங்கள்;
                       அறியாமை என்ற இருள் விலகும்.

              வளர்ச்சி  என்பது ஒரு தொடர் நடவடிக்கை.ஞானேந்திரியங்கள் என்ற மனிதனின் ஐம்பொறிகளும் இணைந்து ஒரு செயலில் உற்றுநோக்கும்போது அந்த செயல் கற்பனைக்கும் எட்டாத வெற்றியைப் பெறுகிறது.இது சரித்திரம் சொல்லும் உண்மை.விவாதங்களுக்கு அப்பாற்பட்ட து .
        சன்னாநல்லூரில் கர்னல் கணேசன் "'அகத்தூண்டுதல் பூங்கா " அமைத்து அங்கு ஞானவிளக்கை ஏற்றி  "அறிவுத்திருக்கோவில் "என்னும் "விண் ஈர்ப்பு மையம்" ஒன்றையும் அமைத்துள்ளார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

            அந்த பூங்காவின் நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக சன்னாநல்லூரின் சுற்று வட்டாரத்தில் மக்களிடையே மனதளவிலும் செயலளவிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
                காரைக்கால் வானொலியில் கணேசன் பங்குகொண்ட "அனுபவம் அற்புதம் "நிகழ்ச்சியின் காரணமாக சுமார் 50 Km சுற்று வட்டார மக்கள் தங்களது நேரம் காலத்திற்கேற்ப அவ்வப்பொழுது வந்து பூங்காவைப் பார்த்து புது சுவாசத்துடன் போகிறார்கள்.

                இது மயிலாடுதுறையிலிருந்து  வந்த சில பெரியோர்கள் .அங்கிருந்து அவர்கள் சென்னையிலிருந்த கணேசனைத் தொடர்புகொண்டு பூங்கா வளாகத்தில் ஏதாவது ஒரு கோவில் அமைத்து பூஜைகள் செய்யலாமா என்று கேட்டார்கள்.
                      கோயிலாவது ஏதடா ? குளங்களாவது  ஏதடா ?
                     கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே !
                      கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே !
                     ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே .
                                                                         -   சிவ வாக்கியர் 
               கணேசன் மிகவும் வருத்தப்பட்டார்.மனிதனின் வளர்ச்சிக்கு பக்தி மார்க்கம்,ஞான மார்க்கம்,செயல் மார்க்கம் ( Karma yoga ) என சில வழிகளிருந்தாலும் ஞான மார்க்கமே அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒருங்கிணைக்கும் .பக்தி மார்க்கம் மக்களை அறியாமைக்குள் ஆழ்த்தி அவர்களது சிந்திக்கும் திறனை முடக்கிவிடும்.

                  நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே 
                  சுற்றி வந்து மொன மொனத்து சொல்லும் மந்திரம் ஏதடா ?
                   நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் 
                  சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?


                     வைஷ்ணவ மாமுனி ராமானுஜரின் வாழ்க்கையை தீவிரமாக அலசி ஆராய்த்தால் அவர் எப்படிப்பட்ட சமூக சீர்திருத்தவாதி என்பது புரியும்.
                 " மனமே கோவில் மன  சாட்சியே தெய்வம்" என்னும் கணேசன் கொள்கைக்கு ஏற்புடையது இல்லை என்று மறுத்துவிட்டார்.
                சன்னாநல்லூர்  "அகத்தூண்டுதல் பூங்கா "ஒரு மாபெரும் சக்தி பீடம்.அது உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும்.உங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் ஒரு மா மனிதனை வீறுகொண்டு எழ வைக்கும்.
                   







                   இந்த அறிவியல் பொக்கிஷம் பற்றி கேள்விப்பட்ட நன்னிலம் ரோட்டரி சங்க அன்பர்கள் பலமுறை சன்னாநல்லூர் வந்து பார்த்திருக்கிறார்கள்.
                         கணேசன் சாதனைகளை  வெளியுலகம் கொண்டுவரும் முதல் முயற்சியாக அவர்கள் சமீபத்தில் ரோட்டரியின் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு   விழாவில் கணேசனைப் பாராட்டும் விதத்தில் ஒரு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்கள்.


             மிகவும் துடிப்பாக செயல்படும் ரோட்டரி உறுப்பினர்கள் நன்னிலம் சுற்று வட்டார பகுதிகளில் மகத்தான மாற்றங்களை கொண்டுவருவார்கள் என வாழ்த்துவோம்.




















சனி, 25 மே, 2019

                                                     The Art of Living
                 
                   Human life is certainly different from all other living beings.Man is creative,adventurist,soft,hard,kind,cruel and what not.His character is developed based on many other factors like rural, urban,rich,poor,educated,uneducated etc.
                     Inspite of such multy faceted environment some of the children develope very disciplined life right from young age.
                    I was one such gifted boy.Even though I was one amongst seven brothers sisters,my approach was in contrast to all.When I was in school going stage we walked 5 km one way to school with pack lunch.This continued for 6 years from 1952 to 1958.
                  During such walk I used to climb all fruit bearing trees along the road side and eat fruits.Mangoes,Jamun  are common trees.
           A group of youngsters who does not tree climbing  used to follow me.I will climb the tree and shake the branches.My friends will pick up the fruits. Later insted of shaking the branches I made small bags with long ropes and down load fruits.
                   This type of inovative and creative approach continues even today at my 77 th year of life.
            we had planted a mango plant in my house garden in Annanagar in 1988.Today the tree has grown very big and fruits are as big as 2 Kg each.
         
                       Average size mangoes are about 1 kg and the biggest of this season is 1.9 Kg.My child hood ceative methods are used to plug and down load mangoes.
                         I have long.medium and short sticks with bag tied at one end.My assistant claimbs the tree and plugs mangoes and down load as I was doing jamun fruits in me childhood.

 These type of activities keeps me young in heart and every time
a mango is pluged from a difficult situation we both keep laughing for over coming such situation.

                         My understanding about Art of living is creative,demonstrative and adventurous. Life goes on happily.










      
The mango bag comming down.


      
My assistant sitting in the branch.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

                                                                       கடை திறப்பு.

                        1972 ம் ஆண்டு,ஜனவரி 25 ம் நாள்.
             திரிபுரா மாநிலத்தின் கடைக்கோடி ரயில்  நிலையமான "தர்மாநகர். "இராணுவ வண்டிகளும் போர் வீரர்களுமாக கூட்டம் அலை மோதுகிறது.இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து ஒரு மிலிட்டரி ஸ்பெஷல் வண்டி புறப்படப் போகிறது
.



                      அதோ ! போர்க்கள இராணுவச்  சீருடையில் கையில் "ஸ்டென் கன்" என்று சொல்லப்படும் அதிகாரிகளுக்கான ஆயுதத்துடன் விறைப்பாக டக்..... ....டக்  என்று வீறுகொண்ட சிங்கம்போல் நடந்து வருகிறாரே  அவர்தான் இந்த மிலிட்டரி ஸ்பெஷல் வண்டியின் கமாண்டர்.

                            காப்டன் கணேசன் ! ! !



           என்ன ! நண்பர்களே ! ஆச்சர்யமாகஇருக்கிறதா? ?
இராணுவப் பொறியியல் கல்லூரியில் மூன்றாண்டுகாலப் பட்டப் படிப்பாக
B.Tech படித்துக் கொண்டிருந்த இவர் இங்கே எப்படி.........என்று வியப்பாக இருக்கிறதல்லவா ?



                   வாழ்க்கையென்னும் காணொளியை  சற்றே பின்னோக்கிப் பாருங்கள்.
             1971 ம்  ஆண்டு மார்ச் மாதம் இந்தியதுணைக்கண்டத்தைப் புரட்டிப்போட்ட சில சம்பவங்கள்.அண்டை நாடானாப் பாகிஸ்தானில் நடந்த
நாடாளுமன்றத் தேர்தலும் அதன் பிறகு நடந்த நிகழ்வுகளும்  கிழக்குப் பாகிஸ்தானின் ஷேக் முஜிபூர் ரஹ்மானை தன்னிகரற்ற தலைவனாக உலகுக்கு அறிமுகப்படுத்தியது.இதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆளும் பாகிஸ்தானிய இராணுவம் நாடு முழுவதும் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது.முடிவாகப் போர் இந்தியாவிற்குள் திணிக்கப்பட்டது.




             ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே உலகை ஆண்ட இந்தியத்திருநாடு இதை மிக சாதுர்யமாக எதிர்கொண்டது.

                             ஏராளமான இராணுவத்தினர் பலவிதமானப் பயிற்சி களுக்காக
பல பயிற்சி தளங்களில் இருந்தனர்.முதல் கட்டமாக பயிற்சிகள் தற்காலிக மாக நிறுத்தப்பட்டு எல்லோரும் எல்லைப்புறப் படைப்பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

                             காப்டன் கணேசன் திரிபுரா மாநிலத்தில் அகர்த்தலாவுக்கு அருகில் முகாமிட்டிருந்த 4 Engineer Regiment என்ற படைப்பிரிவிற் க்கு 01 November 1971 வந்து சேர்ந்தார்.

                    இந்தியத் திருநாட்டின் இராணுவம் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க நாட்டின் மேற்கு,மற்றும் கிழக்கு எல்லைப்புறங்கள் முழுவதும் பரவி எந்தநிமிடத்திலும் போரை எதிநோக்கிக் காத்திருந்தது.

                           பாகிஸ்தானின் Military Administrator General Yahya Khan 01 December 1971 போரை ஆரம்பித்தார்.கிழக்குப் பாகிஸ்தானின் முப்புறமும் (ஒரு புறம் கடல் )பரவிப் பாய்வதற்கு தயாராயிருந்த இந்திய இராணுவம் மின்னல்  வேகத்தில்செயல்பட்டது.அகர்தலா எல்லையில் போரை ஆரம்பித்த கணேசனின் படைப்பிரிவின ர் கொமில்லா -டாக்கா சாலையை chandpur என்ற இடத்தில் துண்டித்து Mynamatti என்றகண்டோன்மென்டை தனிப்படுத்தினர்.அந்நிலையில் அவர்கள் உடனடியாக Brahmanbaria என்ற நகருக்குள் அதிரடியாக நுழைய உத்திர விடப்பட்டது.

                அங்கிருந்து மற்றொரு படைப்பிரிவினர் ஹெலிகாப்டரில் தூக்கப்பட்டு டாக்காவுக்கு அருகில் போரிட ஆயத்தமானார்கள்.அவர்களுக்கு உதவ கணேசன் படைப்பிரிவினர் 130 mm Artillery gun ஐ பொறியாளர்களின் மிதவையில் ஏற்றி Megana என்ற மாநதியின் வழியாக Narasingdi என்ற கிராமத்திலிறக்கி அங்கிருந்து குண்டு வீசினார்கள்.குண்டு டாக்கா விமானதளத்தில் விழுந்தது.






                        இந்திய இராணுவம் டாக்காவை நெருங்கிவிட்டார்கள் என்றறிந்த
பாகிஸ்தானிய படைத்தளபதி Lt Gen A A K Niyazi சரணடைய ஒப்புக்கொண்டார்.




                     16 December1971 மாலை 4.00 மணியளவில் 93,000 பாக் வீரர்கள் இந்திய இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

                      அடுத்த சில தினங்களுக்குள் பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடு செயல்பட ஆரம்பித்துவிட்டது.

                       இந்தியாவின் மேற்கு எல்லைப்புறத்தில் போர் கடுமையாக நடந்திருந்தது.கிழக்கிலிருந்து சில படைப்பிரிவுகள் உடனடியாக இந்திய எல்லைக்குள் வர உத்திர விடப்பட்டது.

                   இதோ !  முதல் இராணுவ அணியாக கணேசனின் பபிடைப்பிரிவினர் இந்திய எல்லைக்குள் வரவும் பிறகு அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் போகவும் உத்திர விடப்பட்டது.

               25 January 1972 கணேசனின் முதல் மிலிட்டரி ஸ்பெஷல் புறப்பட்டது.மிலிட்டரி வண்டிகள் ஏற்றப்பட்ட ரயில் வேகன்களின்மேல் உட்கார்ந்து கொண்டு உலகை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு கணேசன் பயணித்தார்.



                       போர்!  போர்!!போர்!!! பண்டைய மாமன்னர்களின்  போர்ப்பறை காதில் ஒலிக்க  செயங்கொண்டரின்  " கலிங்கத்துப் பரணி"கணேசனின் கற்பனையிலோடுகிறது.

                    கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டரின் கற்பனைவளம் இனிக்க இனிக்க ஊரிச் சுரந்து களிப்பூட்டுகின்ற பகுதி " கடை திறப்பு ".படையெடுத்துச் சென்றவர்கள் நாடு திரும்புகிறார்கள்.அவர்கள் வெற்றி மிடுக்கோடும் புகழோடும் வருகின்றார்கள்.அவர்களுடைய செயலாண்மையை நாடு முழுவதுமே வியந்து போற்றுகிறது.வழிநெடுக மக்கள் வீரர்களுக்கு வரவேற்பளித்து வாழ்த்துகின்றனர்.புலவர்கள் போற்றி பாடுகின்றனர்.

                   இந்த ஆரவாரமான உற்சாகத்தில் கலந்துகொள்ளாமல் அவ் வீரர்களின் காதலியர் மட்டும் ஊடிச்சினந்து ஒதுங்கி நிற்கின்றனர்.பிரிவென்னும் கொடிய வேதனைத்தீயிலே வெதும்பி வாடிய அவர்களின் உள்ளத்திலே வரும் வீர மறவரை வரவேற்கும் தன்  முனைப்பு  ஏற்படவில்லை.

                  மறுநாள் 26 January 1972 மிலிட்டரி ஸ்பெஷல் வண்டி ஓடிக்கொண்டிருக்க குடியரசு தின நிகழ்வுகளை மேடை போன்ற மிலிட்டரி வண்டிமேல் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்த கணேசன் மனதில் கலிங்கத்துப் பரணி நிகழ்வுகளும் கலக்கிறது.

                 பெற்ற தாயை இழந்துவிட்டார்.குடும்ப சூழ்நிலை காரணமாக தம்பிக்குத் திருமணம் செய்வித்து ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது.மகிழ்வற்ற சூழ்நிலையில் அண்ணன்கள் திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.சென்ற இரண்டு மூன்று மாதமாக கணேசனின் நலன் நாடி யாரிடமிருந்தும் ஒரு கடிதம் கூட கிடையாது.

                     இந்நிலையில் கணேசன் போருக்குச் சென்றதும் யாருக்கும் தெரியாது.பாவம் ! !அவருக்கு யார் கடைதிறப்பார்கள் ?திருமணம் ஆகாதவர்
வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க யாருமில்லை.

                            கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டபொழுது அவரது உடைமைகளை பெட்டியில் பூட்டி ஒரு கடிதத்துடன் அந்த சாவியை ஒரு நண்பரிடம் கொடுத்து ஒருசமயம் நான் போர்க்களத்திலிருந்து திரும் பாவிட்டால் கடிதத்தைப் பிரித்துப் படியுங்கள்.அதில் எழுதியுள்ளபடி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

                     இதோ !! போர்க்களம் கண்டு திரும்பிக்கொண்டிருக்கிறார்.தன்னிரக்கம் கொண்டு தாறு மாறாக அவர் வாழ விரும்பவில்லை.இழப்பதற்கு ஏதுமில்லை என்று வாழ முற்பட்டால் தான் ஏதும் பெறுவதற்கும் தகுதியற்றவனாக ஆகிவிடக்கூடும் என்பதை அவர் அறிவார்.

                  காலம் அவரை தாலாட்டியது.யாருமே எதிர் பாராத திசையில் யாராலும் சாதிக்கமுடியாத  அளவு அவரது வாழ்க்கை திசைமாறியது.பல நண்பர்கள் எப்படி சாதித்தீர்கள் ?  யார் முன்னுதாரணம் ? என்று கேட்கிறார்கள்.

                               நான் மனமே கோவில்; மன சாட்சியே தெய்வம் என்ற கோட்பாடுட ன் முன்னோக்கி நடக்கிறேன்.முன்னுதாரணம் தேடுவதில்லை.

              I don't seek presidence;But I set presidence.

                          கணேசனின் சாதனைகளில் ஒன்றாக சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
                 பார்த்தோர் புகழும் கல் தூணை நீங்களும் பார்க்கலாம்.










          

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

                                                யாருக்காக அழுதேன்    ?
                     
                 மனித மனத்தின் வெளிப்பாடுகளில் கண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.சொல்லால்  விளக்கமுடியாத உணர்வுகளை கண்ணீர் வெளிப்படுத்திவிடும்.

           நான் கண்ணீர் விட்ட நாட்களைப்பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.......கிராமத்தில் விவசாய குடும்பத்தில் அண்ணன் ,தம்பி ,அக்காள் ,தங்கை என ஏழு பேர்களுக்கிடையில் பிறந்து வளர்ந்ததால் சண்டை சச்சரவுகளுக்கு குறை வில்லை.



                 
                         நாலைந்து வயது சிறுவனாக இருக்கையில் பாட்டி கூப்பிட்டு ஓடிப்போய் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் அப்பா,அம்மாவிடம் தாத்தா இறந்து போய்விட்டார் என்று  சொல்லி அழைத்து வா என்கிறார்.ஒரே ஓட்டமாக வாய்க்கால்,வரப்புகள் வயல்கள் என்று ஓடி அவர்களை அழைத்துக்  கொண்டு வழியில் கொஞ்சம் தர்ப்பையையும் ( நாணல் )பறித்துக் கொண்டு வந்தேன்.தாத்தாவின் காரியம் முடிந்தது.யாரும் பெரிதாக அழுது புரளவில்லை.

                சில நாட்கள் சென்று உடல் நலமில்லாமல் இருந்த பாட்டியிடம் அம்மா அழைத்துச்சென்று,அத்தை,உன்  பேரனை மிகவும் வாலுத்தனமான இவனை ஆசிர்வதியுங்கள்  என்கிறார்.வீட்டில் எப்பொழும் ஆடம் பிடிப்பதால் ,பாட்டியிடம்,அப்பாவிடம் நிறைய அடிவாங்கியிருக்கிறேன்.

                 பாட்டி,"புத்தியாய் இருந்து பிழைத்துக்கொள் " என்கிறார்.சில வினாடிகளில் இறந்துபோய்விட்டார்.அப்பொழுதும் வேடிக்கை பார்த்தேனே யொழிய பெரிதாக அழவில்லை.

                     1958 March S S L C  தேர்வு சமயத்தில் அம்மா தீராத காச நோய் காரணமாக தஞ்சாவூரில் மருத்துவ மனையிலிருந்தார்.வீட்டில் நானும் இரண்டு தம்பிகள் ஒரு தங்கை மற்றும் அப்பா.

                    காலை 4.00 மணிக்கு எழுந்து சாதமும் ரசமும் செய்துவிட்டு காலைத்தேர்வுக்குப் படித்துவிட்டு  3.கி.மீ.தூரத்திலிருக்கும் நன்னிலம் உயர்நிலைப் பள்ளிக்கு ஓடுவேன்.வழியில் அப்பா ஹோட்டலில்  இட்லி பொட்டலம் வாங்கிக் கொடுப்பார்.

                     காலைத்தேர்வு எழுதிவிட்டு பள்ளிக்குப் பின்னாலிருக்கும் மதுவனேஸ்வரர் கோவிலுக்குப்போய் தனிமையி லமர்ந்து இட்லி சாப்பிட்டுவிட்டு மதிய  தேர்வுக்குப் படிப்பேன்.அப்பொழும் கூட தன்னிறக்கம் கொண்டு அழவில்லை.

          S S L C தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் அது பெரிதாக என்னைப் பாதிக்கவில்லை.மற்ற மாணவர்கள் மேற்படிப்புக்கு ஓடிக்கொண்டிருக்கையில் நான் அமைதியாக வீடு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்,சில நாட்களில் அண்ணன் வந்து T C ,S S L C Book வாங்கி வந்தாயா என்று கேட்டபிறகே அவற்றை வாங்கி வந்தேன்.

                               அண்ணனின் வழிகாட்டலில் செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னீகில் சேர்ந்து மூன்றாண்டுகால ஹாஸ்டல் வாழ்வு  முடிந்து பட்டுக்கோட்டையில் P W D Superviser  வேலையில் சேர்ந்தேன் .

                          இரண்டாண்டுகளில் மெலட்டூர் வெட்டாற்றின் குறுக்கே Regulator கட்டும் வேலைக்கு வந்தேன் .பணம் சம்பாதிக்கவேண்டும் பெரிய வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசை சிறிதும் இல்லாததாலும் லஞ்சம்,பொய்,திருட்டு போன்றவற்றை வெறுத்ததாலும் வாங்கிய சம்பளத்தை வெட்டாற்றில் வீசியெறிந்துவிட்டு P W D வேலையை யாரையும் கேட்காமலேயே ராஜினாமா செய்தேன்.

                            ராஜினாமாவை ஏற்காத உயரதிகாரி நாட்டின் அவசரகால நிலையை நினைவுபடுத்தி  " நீ ஏன் ஒரு இராணுவ அதிகாரியாகக்கூடாது"
என்ற  கேள்வியை முன் வைத்தார்.

                    இராணுவத்தேர்வுகள்,பின்னர் பயிற்சிகள் முடிந்து இந்திய -திபெத் -நேபாள எல்லையில் படைப்பிரிவில் சேரும் உத்திரவுடன் சன்னாநல்லூர் வந்தேன்.பதினைந்து நாட்கள் விடுமுறை முடிந்து 26 August 1964  இரவு பத்து மணிக்கு சன்னாநல்லூரில் ரயிலேறவேண்டும்.

                    தாங்கமுடியாத சோகம் மனதைக் கவ்வ ஆரம்பித்தது.வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றினேன்.அம்மா அப்பாவை நிற்கவைத்து காலில் வீழ்ந்து வணங்கினேன்.எழுந்து நிற்கையில் கேவிக் கேவி கதற ஆரம்பித்தேன்.



                                 ஏன் அழுதேன் ? யாருக்காக அழுதேன் ? என்ன நினைத்து அழுதேன் ? என்று இன்று சுமார் 55 வருடங்களான பின்னும்  எனக்குப் புரியவில்லை.

                       இராணுவ வாழ்வின் பல மனதைக் கசக்கிப் பிழியும் நினைவுகளில்
1970 ல்  அம்மா இறந்ததையும்  நான் காணவில்லை;1979 ல் அப்பா இறந்ததையும்  நான் காணவில்லை.

                  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
                  அவ்வையின் பொன்மொழி  வீணா
                  ஆண்டவன்போலே நீதியைப் புகன்றாள்
                   அனுபவமே இதுதானா  ?
       
              வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன.அனந்தலக்ஷிமி என்ற பெண் கடவுளின் பரிசாக என் வாழ்க்கைத் துணைவியானார்.

             காலப்போக்கில் அரவிந்தன்,கார்த்திக் என்ற இரு அற்புதமான ஆண்குழந்தைகள் பிறந்தனர்.

                     பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் நான் சன்னாநல்லூரில் "அகத்தூண்டுதல் பூங்கா "  அமைத்து ஒரு மனிதனின் செயலாக்கத்தை எந்த புற காரணங்களும் தடுக்க முடியாது என்று உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறேன்.
 

                  சன்னாநல்லூரும் அகத்தூண்டுதல் பூங்காவின் செயல்பாடுகளும் வருங்காலத்தில் சரித்திரம் படைக்கும் என்று எதிர் பார்ப்போம்.
                         




















சனி, 2 மார்ச், 2019

நஞ்சையும் புஞ்சையும் விளையும் இந்த மண்ணில் .......
                     திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் கிராமம்.
                     28    Feb 2019 வியாழக் கிழமை மாலை 4.00 மணி.
கர்னல் கணேசன் அமைத்துள்ள அகத்தூண்டுதல் பூங்காவில்  கூட்டம் நிரம்பி வழிகிறது.A I R காரைக்கால் ஸ்டேஷனின் F M பிரிவில் அங்கு ஒரு மணி நேர  "ஊரும் உறவும் "நேரலை நிகழ்ச்சி  4.00-5.00 மணி வரை நடை பெற உள்ளது.பொது மக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து  தங்களது குரலை ரேடியோவில் கேட்கவேண்டும் என்று ஆர்வமுடன் கூடி இருக்கிறார்கள்.

                          "பிறந்த இடம் தேடிநடந்த தென்றலே 
                                   பெருமையுடன் வருக....."


என்ற  பாடலுடன் கணேசன் வரவேற்கப்படுகிறார்.நிகழ்ச்சி தொடங்குகிறது.'"அகத்தூண்டுதல் பூங்கா "என்ற இந்த சுய சிந்தனை அரங்கம் எப்படி,ஏன் ,உருவானது என்று காரண காரியங்களுடன் கணேசன் விளக்கிச் சொல்ல வயல் வெளிகளிலும் காரிலும் கடைகளிலும் F M ரேடியோ  விலும்  நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருந்த மக்கள் பூங்காவுக்கு ஓடிவருகிறார்கள்.

       சுமார் 50 Km சுற்று வட்டாரத்தில் கணேசனது குரலும் பொதுமக்கள் குரலும் இடை இடையே பொருத்தமான பாடல்களுமாக நிகழ்ச்சி மிக மிக மகிழ்வோடு நடந்து முடிந்தது.

             இரவு  சுமார்  8.00 மணியளவில் ஒரு ஸ்கூட்டரில் இரண்டு பேர் பூங்காவிற்கு வந்து கர்னல் கணேசனை சந்திக்க முடியுமா என்ற கேள்வியோடு நின்றார்கள்.

                      கணேசன் வெளியே வந்து அவர்களை வரவேற்று  "வாருங்கள் "என்று அழைத்தார்.

                    அப்பொழுதுதான் தெரிந்தது அவர்களில் ஒருவர் இரு கண் பார்வையையும் முற்றிலும் இழந்தவர் என்பது.

கணேசன் அதிர்ச்சியடைந்தார்.இரு விழிப்பார்வையையும் இழந்தவர் பூங்காவில் எதைப்பார்க்கப் போகிறார்.?
   
                       அந்தப் பார்வை இழந்த நண்பர் M A,M Phil படித்தவர் என்றும் அதன் பிறகே பார்வையை சில மருத்துவ காரணங்களினால் இழக்க நேரிட்டது என்றும் சொன்னார்.ஆனால் பார்வை இல்லை என்பதனால் தனது அறிவுச்செல்வத்தைப் பூட்டி வைத்துவிடாமல் ஏராளமான மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதாகவும் சொன்னார்.

                       அன்றைய "ஊரும் உறவும் " F M  ரேடியோ நிகழ்ச்சியை  முழுவதும் கேட்டதாகவும் சிம்மக் குரலோன் சிவாஜி கணேசனை நினைவுபடுத்தும் இந்த சன்னாநல்லூர் சகதியில் பிறந்து பனியுலகை  ஆண்ட பாரதப் புதல்வன்  கணேசனை உடனே சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நண்பரின் உதவியுடன் வந்ததாகவும் சொன்னார்.

                    கணேசன் மிக மிக பெருமையுடனும் கருணையுடனும் அவர்களுடன் பேசிவிட்டு தனது நூல்களில் சிலவற்றை அவர்களுக்கு அன்போடு வழங்கினார்.
  ஒரு பேப்பரும்  பேனாவும் கேட்ட நண்பர் மடை திறந்த வெள்ளம்போல் ஒரு கவிதை சொல்ல பார்வையுள்ள அவரது நண்பர் எழுதினர் .

                  இதோ அந்த கவிதை உங்களுக்காக !

                                              The Great Polestar.
       நஞ்சையும் புஞ்சையும் விளையும் இந்த மண்ணில் 
          பஞ்சமும்  பசியும் போக்கிடமுடிந்தது.
          நல்லறமும் நற்செயலும் நவின்றிட யாருமில்லை.
           எதிர்கால இளைஞர்களை செதுக்கிட சிற்பியில்லை.
          சிதைந்தது அவர் வாழ்வு;துடித்தது என்போன்றோர் மனம்.
          அகத்தின் சுரங்களை செவிமடுக்க எவருமில்லை.

            அகத்தில் விளையும்  ஆத்மாவின் சக்தியை கூட்ட  
           பூங்கா அமைத்திட்ட புதுமை நாயகரே !

             நூறாண்டுகளிலும் நோயற்ற வாழ்வுதனை வாய்க்கப்பெற்று 
           வாழ்க!  வாழ்க ! வாழ்கவே !!!
          வண்டமிழ் நாள்போல வளர்க்க உன் புகழ்.
                                                        என வாழ்த்தும் 
                                                       இவன் பெயராம் 
                                                             சி.சே.யாதவன் 
எழுதிய நண்பர் 
மாத்தூர் கண்ணன் என்கிற 
ஜெயக்குமார்.


                    பார்வை இழந்த நண்பர் யாதவன் தேசியக்                          கொடிபிடித்திருக்கிறார்.











புதன், 5 டிசம்பர், 2018

                                             The Park that "Inspires"

          Readers may be aware  that on my return from Antarctic Expedition  I had concentrated on "Human Development".Because many times I had experienced that your thought process in otherwords The detailed planning of a task is almost half done.The mental process of executing a task  and correcting any mistake there in makes the actual execution very easy and ofcourse a great success.
           This type of a thorough mental appriciation before execution  has lead to thumping success many times in my life.
            My conduct of India's 5th wintering at Antarctica  was a historical success. All obstacles and all those who stood in my way moved to the side as I proceeded.
                As you all may be knowing I had taken a handfull of mother earth from my birth place and sprinkled arround Dakshingangotri,India's research station seeking cosmic blessings when I took over as Station Commander.Just before return from Antarctica I took 5-6 Antarctic rocks as memorobilia.These rocks were lieing in front of my house at Annanagar,Chennai as I did not have  funds to execute my plan.
                After about 15 years when my pension was revised and I got arrears of revised pension I immediately swung into action to establish "Inspirational Parks.
                 On 24-11 2011 I had sent out a circular in Tiruvarur Dt titled as "சரித்திரம் படைக்கத் தயாராகும் சன்னாநல்லூர்.
             About 1000 copies were distributed,and I started my work.
On 23-12 2012 the Pillar was innagurated.
                 On 17-05 2017 the cosmic library was innagurated.

                      During all these process many people had visited Sannanallur.Some of the friends who were really interested to see this were unable to come.But when they finally came to  Sannanallur they were wnder struck about the magnitude of the work and the ease with which It was Executed.
              The writtings in the visitors book is like this.

I had decided to celeberate my 76 th birth day at Inspirational Park. My Younger sons Father -in law  took all the pain to travel from Bangalore and share our happiness.
After two days of stay with us he left for Bangalore.

                    He wrote very sensitive and emotional message.






12:48 (3 minutes ago)

I think you  ,with your effort ,  have won a page in the annals of history of your village , a paragraph in history of your state , a line in the history of the country and  of course , my heart too.

You etched your name on your village to last long for next 200 years.

Your life and times are merited to find a place in language prose of primary classes as an example for " celebration of human life and spirit ".

Regards




I am really gratefull to all my well wishers.